காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வியே (காணொளி)
அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்ப ட்டுள்ளது என சுவிட்ஸர்லாந்தில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்பின் இலங்கைக்கான பிரசார முகாமையாளர் யுவேஸ் போவி தெரிவித்துள்ளார்.
அதிகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கொண்டிருக்கும் நாடாக இலங்கை முன்னிலையில் உள்ளது.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு ஒரு மசோதாவை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியது.
எனினும், இந் நாள்வரைக்கும் அது நிறுவப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை விசாரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகையிலுமான ஆணைக்குழுக்கள் இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ஆரம்ப காலத்தில் இருந்தே, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தெருக்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக இலங்கையில் தமிழ் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது மற்றும் எங்கே இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றனர், அவர்களின் தலைவிதி.
ஆகஸ்ட் 30 ஆம் திகதியை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் என பிரகடனம் செய்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான உண்மைகள், அவர்களுக்கான நீதி மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இழப்புக்கான நல்லதொரு பதிலைபெறுதல் ஆகியவற்றினை இந்த எதிர்ப்புபோராட்டத்தின் கோரிக்கையாக கொண்டு கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு தொடர தீர்மானித்துள்ளோம்.
இந்தப் பொன்னான நாளில், அச்சுறுத்தப்பட்டுள்ள மக்களுக்கான சங்கம் இல ங்கை தமிழ் பெண்களின் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்தும் மற்றும் தமிழ் பெண்களோடு ஒன்றிணைந்து பெர்ஸிலுள்ள காசினோ பிளாட்ஸ் நகரில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளது.
பல மாதங்களாக, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஐந்து கிராமங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது உறவுகளுக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.
இவர்களின் இந்த குரல் ஒலியானது சுடும் சூரியன் எதிர்த்து நின்றாலும், பாதை ஓரத்தின் அழுக்கு மற்றும் தூசு சிரமமாய் மாறினாலும் இரவின் இருட்டு இடராய் இருந்தாலும் இலங்கையின் பாதை ஓரங்களில் உறவுகளுக்காய் ஏக்கித்தவித்தவண்ணமுள்ளார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய பதில்களைப் பெறுவதையே தங்களின் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர். உலகிலேயே இலங்கையானது அதிகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கொண்டிருக்கும் நாடாக இந்நாடு உள்ளது.
யுத்தம் முடிவடைந்ததில் இருந்து அப்பாவி மக்களின் மரணத்துக்கும் மற்றும் இழப்பிற்கும் எந்தவொரு முடிவும் இன்னும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கமானது இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை தொடர்பில் தீர்வுகாண எடுத்த எந்தவொரு முயற்சியிலும் தோல்வியினையே கண்டுள்ளது. பொறுப்பான அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன ?...
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு ஒரு மசோதாவை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியது.
எனினும், இந்த நாள்வரைக்கும் அது நிறுவப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை விசாரிக்க பணிக்க பட்ட எல்லா வகையிலுமான ஆணைக்குழுக்கள் இதுவரைக்கும் எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்து தீர்க்கவில்லை.
நாட்டின் செயலற்ற தன்மை காரணமாக நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 2017ஆம் ஆண்டு, ஜூன்மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி சிறிசேன, வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக நீதிகோரி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்தார்.
இந்த எதிர்ப்பு போராடத்தில் ஈடுபடுவோர் சிலர், அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை இலங்கை அதிபரின் கைகளில் ஒப்படைத்தார்கள். இந்த சந்திப்பின் முடிவில், கால அளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மூன்று பட்டியல்களை பத்திரிகைகளில் வெளியீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இவற்றுள் முதலாவது பட்டியலானது
இறுதி யுத்தத்தின் முடிவில் யாரெல்லாம்
சரணடைந்தார்களோ
மாற்றும் யாரெல்லாம் தடுப்புகாவலில் அடைத்து வைக்கபட்டு உள்ளார்கள் என்பதை பற்றிய பெயர் பட்டியலாகும்,
இரண்டாவது பெயர் பட்டியலானது
யாரெல்லாம் இரகசிய தடுப்புகாவல் நிலையங்களில் தடுத்து வைக்கபட்டிருப்பவர்கள் பற்றியது, மற்றும்
மூன்றாவது பெயர்பட்டியலானது
யாரெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டு இருக்கின்றனரோ அவர்களின் பெயர்பட்டியல்.
ஆனால் இன்று வரையும் இலங்கை அதிபர் தன்னை சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிகோரி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, தான் கொடுத்த வக்குறுதியை நிறைவேற்றுவதில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
"அரசாங்கமானது இப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்காக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோரின் கோரிக்கைகளை செயற்படுத்த வேண்டும், இதன் ஊடாக இலங்கையில் இன, மத, மற்றும் மொழி என்பவற்றால் வேறுபட்டிருக்கும் மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டுவரமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.