Breaking News

யுத்த கால நிலைமை போல் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களி லும் இன்று காலை முதல் பொலிஸா ரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வீதிச்சோதனை நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்தே இந்தச் சோதனை நட வடிக்கைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் வாள் வெட்டுத் தாக்குதல் உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அதனோடு தொடர்பு டைய சந்தேக நபர்களைத் தேடி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வலை வீசியுள்ள நிலையிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்ப மாகியுள்ளன. 

பொலிஸாரினதும் விசேட அதிர டிப்படை யினரதும் இந்த நட வடிக்கையால் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் யுத்த கால நிலை மையை ஒத்த சூழ்நிலை நிலவு வதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.