Breaking News

தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு!

சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தவறான கரு த்துக்களை வெளியிட்டு வருவதற்கு நடிகர் அஜித் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில் பிரகடனப்படுத்தி வருகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 மேலும், இவர்கள் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது அஜித்துக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்படியான நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் தன் மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறார்’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.