Breaking News

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆதரமில்லை ! கைவிரித்தார் ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பி லான பெயர் பட்டியல்களோ, தகவல்க ளோ எதுவும் தங்களிடம் இல்லை யென முப்படையினர் தெரிவித்துள்ள தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கை விரித்துள்ளார். 

நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலு வலகத்தில் காணமல்போனோர் சங்க ங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்ற போது கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வேளை காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி உள்ளிட்டோரும் கலந்துள்ளனர். 

இவர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் பட்டியல்களோ, தகவல்களோ எதுவும் தங்களிடம் இல்லையென முப்படையினரும் எங்களிடம் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.