Breaking News

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து 12 உறுப்­பி­னர்கள் - வெளியேறுவதாக

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறுவதாக சுயா­தீ­ன­மா­கவோ அல்­லது பொது எதி­ர­ணியில் அம­ரவோ தயா­ராக இருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் குறிப்பிட்டுள்ளனா். தேசிய அர­சாங்­க த்தின் மோசடிச் செயற்­பா­டு­களிற்கு தம்மால் பங்­கெ­டுக்க முடி­யவில்லை யெனவும் ஜனா­தி­ப­தி­யிடம் குறிப்பி ட்டுள்ளனர். அர­சாங்­கத்தில் இடம்­பெறும் மோச­டி­களை கண்­டித்தும் முரண்­பா­டு­களை கண்­டித்தும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறி சுயா­தீ­ன­மா­கவோ அல்­லது பொது எதி­ர­ணியில் செயற்பட தீர்மானம் மேற்கொண்ட நிலையில் நேற்றைய நடைபெற்ற விசேட அமைச்­ச­ரவை சந்­திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பார­ாளு­மன்ற குழுக் கூட்­டத்தில் தெரியப்படுத்தவுள்ளனர். 

எனினும் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 12 உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ர­பால சிறி­சே­ன­வுடன் விசேட சந்­திப்­பொன்றை நடத்திய வேளை  இவர்கள் தமது நிலை­ப்பாட்டை ஜனா­தி­பதி மைத்­தி­ர­ிபால சிறி­சே­ன­விடம் தெரியப்படுத்தியுள்ளனர். 

நேற்று இரவு பத்து மணிக்கு ஆரம்­பித்த இந்த சந்­திப்­பா­னது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்துள்ளதுடன் பிர­தி­ய­மைச்சர் அருந்­திக்க பெர்­னாண்டோ தலை­மையில் 12 உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்­துள்­ளனர். 

 மத்­திய வங்கி ஊழல் மோச­டிகள் தொடர்பில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்ள நிலையில் தற்போது நெடுஞ்­சா­லைகள் புன­ர­மைப்பு விவ­கா­ரத்தில் பாரிய ஊழல் இடம்­பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதேபோல் சைட்டம் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை, தேர்தல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் பிரச்­சி­னைகள் என தேசிய அர­சாங்­கத்தில் பாரிய பிரச்­சி­னைகள் தொடர்ந்து வருகின்றது.

ஆகவே இந்த பிரச்­சி­னைகள் அனைத்­தையும் ஜனா­தி­பதி முன்­னி­லையில் தெரி­வித்­துள்­ள­துடன் தாம் வகிக்கும் சகல அமைச்சுப் பொறுப்­பு­களில் இரு ந்தும் விலகி சுயா­தீ­ன­மாக பார­ாளு­மன்­றத்தில் செயற்­ப­டவோ அல்­லது பொது எதி­ர­ணியில் அமர்ந்து செயற்­ப­டவோ எமக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

இந்த நிலைப்­பாட்டில் மாற்றம் இல்­லை­யென கூறி­யதினால் நாம் 12 பேர் தற்­போது அர­சாங்­கத்தில் இருந்து விலக தீர்­மா­னித்­துள்­ள­துடன் . இது முதல் கட்ட நகர்­வெ­னவும் இது எவ­ரதும் தூண்­டுதல் அல்ல, மக்­களின் கேள்­வி­க­ளுக்கு எம்மால் பதில் கூற முடி­யாது உள்­ளது எனவும் ஜனா­தி­ப­தி­யிடம் சுட்டிக் காட்­டி­யுள்­ளனர். 

ஆரம்­பத்தில் இருந்தே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பலம் அனை­வரும் இணைந்து செயற்­ப­டு­வதில் உள்­ளது என்­பது தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கி அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்டும் என்­பதை ஆரம்­பத்தில் இருந்தே தாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தெரியப்படுத்தியதாகவும்,

 மாற்றம் ஒன்று வேண்டும் அதற்கு வேறு வழி­மு­றைகள் இல்­லை­யெ­னவும். ஆகவே தாம் சுயாதீனமாக அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை பாதுகாத்துக்கொண்டு எதிரணியில் அமரவுள்ளதாகவும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இந்த மாத இறுதிக்குள் தமது நிலைப்பாடு அனைவருக்கும் தெரிய வரும் எனவும் குறித்த சந்திப்பில் அவர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.