Breaking News

பொதுவாக்கெடுப்பே தமிழருக்குரிய ஆயுதம் - வைகோ

ஜெனீவாவில் இருந்து வைகோ சமஷ்டி,  
அதிகாரப் பகிர்வு ஓர் ஏமாற்று வித்தை! 

ஆயுதம் ஏந்­திப்­போ­ராட வேண்­டிய தேவை ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு இனி­யில்லை. பொது­வாக்­கெ­டுப்­பொன்றே தமி­ழர்­க­ளுக்­கு­ரிய ஆயுதம். சமஷ்டி அதி­கா­ரப்­ப­கிர்வு என்­ப­தெல்லாம் ஓர் ஏமாற்றுவித்தை. அந்த மாய­வ­லை க்குள் தமிழ் மக்கள் சிக்­கி­வி­டக்­கூ­டாது. தந்தை செல்வா சிங்­கள அர­சாங்­கங்­க­ளினால் ஏமாற்­றப்­பட்­டதன் கார­ண­மா­கவே வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத்­தைச்­செய்தார் என தமி­ழக மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்­த­லைவர் வைகோ தெரி­வித்தார். ஜெனீ­வா­வி­லி­ருந்து வீர­கே­சரி வார வெளி யீட்­டுக்கு வழங்­கிய சிறப்பு செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்­துத்­தெ­ரி­விக்­கையில், நான் இலங்­கை­யி­லுள்ள தமிழ் தலை­வர்­க­ளைப்­பற்றி எந்த விமர்­ச­னத்­தையும் செய்ய முற்­ப­ட­வில்லை. 

அங்கு உண்­மை­யான உணர்­வுள்ள தலை­வர்கள் இருக்­கி­றார்கள். ஏனை­ய­வர்­களும் இருக்­கி­றார்கள். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள், யுவ­திகள் தமது உயிர்­களை விடு­த­லைக்­காக தியாகம் செய்­தி­ருக்­கி­றார்கள். 

அந்­தப்­பூ­மியில் இன்று 90 ஆயி­ரத்­துக்­கு­மேற்­பட்ட குழந்­தைகள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள். மது, விப­சாரம், பாலியல், போதை­வஸ்து என திட்­ட­மிட்­ட­மு­றையில் கலா­சார சீர­ழி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. 

இவ்­வாறு கொடு­மைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், இலங்­கை­யி­லுள்ள தமி­ழர்­களை ஆயு­த­மேந்திப் போரா­ட­வேண்­டு­மென நான் கூற­வி­ரும்­ப­வில்லை. 

சமஷ்டி பெறு­வது சாத்­தி­ய­மற்­றது என்­பதை தந்தை செல்வா உணர்ந்­து­கொண்­ட­த­னால்தான் வட்­டுக்­கோட்டைப் பிர­க­ட­னத்தை செய்தார். அமை­தி­யா­கப்­போ­ராடி தோற்­றுப்­போ­ன­வர்கள் தமி­ழர்கள். 

தற்­பொ­ழுது பௌத்த நாடு என்ற கோதாவில் தமி­ழர்­களை நிரந்­தர அடி­மை­க­ளாக்க இலங்கை அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. இந்த உண்­மையை உலகம் தெரிந்­து­கொள்­ள­வேண்டும். 

சுவிட்­ஸர்­லாந்து நாட்­டில்தான் முதன்­முதல் அர­சியல் சாச­னத்தில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பென்ற முறை கொண்­டு­வ­ரப்­பட்­டது. நாடொன்றில் வாழும் குறிப்­பிட்ட தொகை மக்கள் பிரிய விரும்­பினால் சட்­ட­மொன்­றைக்­கொண்டு வந்து பொது­வாக்­கெ­டுப்­புக்கு விட­வேண்­டு­மென்ற சட்­டத்தை கொண்­டு­வந்­தார்கள். 

அதன்­படி பொது­வாக்­கெ­டுப்­பென்­பது சுய நிர்­ணய அடிப்­ப­டையில் பார்ப்பின் சுய­நிர்­ணய உரி­மை­யென்­பது மனித உரி­மைத்­தொ­டரின் ஒரு வாக்­கி­ய­மாகும். அதேபோல் ஜெனீவா மனித உரிமைப் பிர­க­ட­னத்தில் சுய­நிர்­ணய உரி­மை­யைக்­கோ­ரு­வ­தற்கு சகல மக்­க­ளுக்கும் உரி­மை­யுண்­டென அந்த சட்­ட­வி­திகள் திட்­ட­வட்­ட­மாக கூறு­கின்­றன. 

ஆகவே சுய­நிர்­ணய உரி­மை­யைப்­பெ­று­வ­தற்­கான வழி­யென்ன? ஆயு­தப்­போ­ராட்­டத்தின் வாயி­லாக சுய­நிர்­ணய உரி­மையை பல­தே­சிய இனங்கள் உல­கத்தில் பெற்­றி­ருக்­கின்­றன. 

அவ்­வாறு போரா­டிய அமைப்­புக்­க­ளுக்கு பல­நா­டுகள் உத­வி­ பு­ரிந்­துள்­ளன.

அந்த இனத்­தைச்­சேர்ந்த மக்கள் எங்­கி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு ஆயு­தங்­களை வழங்கி போராட உத­வி­னார்கள். இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீ­னத்­துக்கும் ஐயா­யிரம் ஆண்­டு­க­ளாக பிரச்­சினை இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது. 

இஸ்ரேல் தனி­நா­டா­வ­தற்கு அமெ­ரிக்­கா­வி­லுள்ள யூதர்கள் கோடி கோடி­யாக அள்­ளிக்­கொ­டுத்த ஆயு­தங்­களை, ஹோல்டா மேயர் கொண்­டுபோய் பென்­குயின் என்ற இடத்­திலே சேர்த்து ஆயு­தப்­போ­ராட்­டத்தின் மூலம் நாட்டை நிர்­மா­ணித்­தார்கள். 

பிரித்­தா­னியா அதற்கு முழு­மை­யாக உதவி புரிந்­தது. ஆயு­தப்­போ­ராட்­டத்தை நடத்­த­மு­டி­யாத சூழலில் பொது­வாக்­கெ­டுப்பு நடத்தி தங்­க­ளு­டைய நாட்டின் சுய­நிர்­ணய உரி­மையை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற முடி­வுக்கு உல­கத்­த­லைர்கள் வந்­தார்கள். 

ரஷ்­யாவின் ஒக்­டோபர் புரட்­சியின் தலைவர் லெனின் தான் தேசிய இன­மொன்­றுக்கு சுய­நிர்­ணய உரி­மை­யுண்­டென்­பதை முதல்­மு­த­லாக பிர­க­ட­னம்­செய்­தவர். 

பின்னர் இரண்டாம் உல­க­மகா யுத்­த­கா­லத்தில் 1941 இல் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக இருந்த ரூஸ்வெல்ட் பிரித்­தா­னியப் பிர­தமர் வின்­சன்ட்­சேர்ச்­சிலும் அத்­தி­லாந்­திக்­க­டலில் ஒரு கப்­பலில் குறித்­த­வொரு ஒப்­பந்­தத்தை செய்­தனர். 

அந்த ஒப்­பந்தம் அத்­தி­லாந்திக் ஒப்­பந்தம் என அழைக்­கப்­பட்­டது. அந்த ஒப்­பந்­தத்தில் சுய நிர்­ணய உரி­மையை பிர­க­டனம் செய்­தார்கள். 

இத்­த­கைய பிர­க­ட­னங்­க­ளின்பின் சுய­நிர்­ணய உரி­மைக்­கான பொது­வாக்­கெ­டுப்­பா­னது 1905 ஆம் ஆண்டு ஸ்கன்­டி­நே­வியன் நாடு­க­ளுக்­கான பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு அமை­தி­யான முறையில் நோர்வே ,சுவீடன் ஆகிய நாடுகள் தனி நாடு­க­ளாக பிரிந்து கொண்­டன. 

1944 ஆம் ஆண்டு ஐஸ்­லாந்து பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாகப் பிரிந்­தது. இது­போ­லவே 1958 ஆம் ஆண்டு பொது வாக்­கெ­டுப்பின் மூலம் கயானா பிரிந்து கொண்­டது. 

1990 இல் சுவே­னியா ,குரே­சியா பொது­வாக்­கெ­டுப்பின் கார­ண­மாக தனி­நா­டுகள் ஆயின. 1991 ஆம் ஆண்டு குரே­சியா பொது­வாக்­கெ­டுப்பில் தனி­நா­டா­யிற்று. 

இதில் முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால் ஜோர்­ஜி­யா­வி­லி­ருந்து பராத்­தீ­வுகள் மொத்தம் 11450 சனத்­தொகை கொண்ட இந்த நாட்டில் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு .5 வீதத்தால் வெற்­றி­பெற்று தனி­நா­டா­கி­விட்­டார்கள். 

1991 செப்­டெம்­பரில் மசி­டோ­னியா 1991 டிசம்­பரில் உக்­ரேயின் 1991 டிசம்­பரில் ரான­வித்­தி­ரியா மல்­கோவா 1992 பொஸ்­னியா ஆகிய நாடுகள் பொது வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டு­க­ளா­யின. 

6 இலட்சம் மக்­களை மாத்­திரம் சனத்­தொ­கை­யா­கக்­கொண்ட எரித்­தி­ரியா 1993 ஆம் ஆண்டு தனி­நா­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதே போன்றே மல்­டோவா 1994 மார்ச்­சிலும் கிழக்கு தீமொர் 1999இல் இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து பொது வாக்­கெ­டுப்பில் பிரிந்­தது. 

கிழக்கு தீமோர் பிரி­வ­தற்­கான பொது வாக்­கெ­டுப்பை ஐக்­கிய நாடுகள் சபையே தனது நேரடிக் கண்­கா­ணிப்பில் நடத்­தி­யது. இதன்­பி­றகு 2011இல் தென்­சூடான் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் பிரிந்து கொண்­டது. 

நாளைய தினம் குர்தீஸ் நாட்­டுக்­கான பொது­வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது. அநே­க­மாக பொது­வாக்­கெ­டுப்பில் அவர்கள் வெற்­றி­பெ­று­வார்கள். பிரி­த­தா­னியப் பேர­ரசின் கீழ்தான் இங்­கி­லாந்து அடி­மைப்­பட்­டுக்­கி­டந்­தது. 

பிரித்­தா­னிய சாம்­ராஜ்­ஜியம் இலங்­கையை விட்டு வெளி­யே­றி­ய­போது தமிழ் மக்­களை சிங்­கள மக்­களின் அடி­மை­க­ளாக்­கி­விட்டு வெளி­யே­றி­விட்­டார்கள். 

நியூ­ச­லி­டே­னியா மற்றும் போல்­போ­கன்­வில்லே ஆகிய நாடு­களில் சுதந்­திர நாட்­டுக்­கான பொது­வாக்­கெ­டுப்பு 2019 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. இந்த நாடுகள் 8 இலட்­சத்­துக்கும் 10 இலட்­சத்­துக்கும் இடைப்­பட்ட சனத்­தொகை கொண்ட சிறிய நாடுகள். 

அவ்­வாறு இருக்கும் போது ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்கள் ,ஈழத்­த­மி­ழர்கள் தனி­ய­ரசு வைத்து தனித்­தே­ச­மாக, தனித்­தே­சிய இன­மாக வாழ்ந்­த­வர்கள். மொத்த இலங்­கையும் தமி­ழர்­களின் பூர்­வீக நிலங்­க­ளாக இருந்­தவை. ஏனைய சமூ­கத்­த­வர்கள் வந்து குடி­யே­றி­ய­வர்கள். 

இது­வொரு புற­மி­ருக்க, இலங்.கையை ஆட்சி செய்த போர்த்­துக்­கீசர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் இரண்டு தேசிய இனங்­களை ஒன்­றாக்கி வைத்­தார்­களே தவிர, கலா­சாரம், நாக­ரிகம், பண்­பாடு ஆகி­ய­வற்றில் இரு இனமும் ஒன்­றா­க­வி­ருக்­க­மு­டி­யாது என்று கரு­த­வில்லை. 

எனவே, நம்­பக்­க­முள்ள நியா­யத்தை உலக நாடு­க­ளுக்கு கொண்­டு­செல்­கி­ற­போது மேலே குறிப்­பிட்ட நாடுகள் பொது வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டு­க­ளா­கி­யி­ருக்­கும்­போது இன­வ­ழிப்­புக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்கும் தமி­ழீழம் ஏன் தனி­நா­டாக முடி­யாது. 

மனி­த­வு­ரி­மைப்­பி­ர­க­டனம் நிறை­வேற்­றப்­பட்­ட­தற்கு முதல்நாள் 1948 டிசம்பர் 9 ஆம் திகதி இனப்­ப­டு­கொலை சம்­பந்­த­மான பிர­க­டனம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. இனப்­ப­டு­கொ­லை­யென்றால் என்ன என விளக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

அதற்­கான தண்­டனை என்­ன­வென்­ப­து­பற்றி கூறப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த இலக்­க­ணங்­க­ளுக்கு உட்­பட்­ட­துதான் இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­க­ளாகும். 

என­வேதான், இலங்­கையில் இனப்­ப­டு­கொலை நடை­பெற்­றமை நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்கும் சூழலில் உலகம் கடமை தவ­றி­யது.சர்­வ­தேச நாடுகள் கடமை தவ­றி­யுள்­ளன. ஐ.ந. சபை கடமை தவ­றி­யி­ருக்­கி­றது. 

இந்­த­வி­வ­கா­ரத்தை உறுப்பு நாடுகள் பாது­காப்பு சபை­யி­னூ­டாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றுக்கு கொண்டு சென்­றி­ருந்தால் எப்­படி பொஸ்­னியா தலை­வ­ருக்கு நடந்­ததோ அதை­வி­ட­அ­தி­க­மான தண்­ட­னைக்கு முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவின் கூட்­டத்­தினர் பெற்­றி­ருப்­பார்கள். 

எனவே, நம்­பக்கம் நியாயம் இருப்­பது மட்­டு­மல்ல நாம் இரத்தம் சிந்­திப்­போ­ரா­டி­யது மட்­டு­மல்ல எதிர்­கா­லத்தில் நம்­மி­னத்தின் கலா­சார சுவ­டுகள் இல்­லாமல் அழிந்து நிரந்­தர அடி­மைகள் ஆக்­கி­வி­டு­வார்கள் என்­பதை உணர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

மேலும் உல­கத்தின் பூர்­வீகம் ஒன்று அழிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது . அது தடுக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தை­யு­ணர்ந்து ஒரே­கு­ரலில் போராட வேண்டும். இனி ஆயுதம் ஏந்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 

பொது­வாக்­கெ­டுப்பே ஆயு­த­மாகும். இந்த ஆயு­தத்தை உல­கத்­த­மி­ழர்கள் பயன்­ப­டுத்­த­வேண்டும். எனக்கு ஒரே­யொரு மகிழ்ச்சி 53 ஆண்­டுகள் அர­சியல் செய்து வரு­கிறேன். 5 ஆண்­டுகள் சிறை­யி­லி­ருந்­துள்ளேன். 

ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­காக இரண்டு ஆண்­டுகள் சிறை­வாசம் அனு­ப­வித்தேன். வாழ்க்­கையில் நான் ஏதா­வது சாதித்­துள்ளேன் என்றால் 2011 ஆம் ஆண்டு ஆனி­மாதம் ஐரோப்­பிய ஒன்­றிய கட்­டி­டத்­தொ­கு­தியில் நடை­பெற்ற ஈழத்­த­மிழர் ஆத­ரவு மாநாட்டில் குறிப்­பிட்­டி­ருந்தேன் 'தமிழ் மக்கள் உரி­மை­யைப்­பெ­று­வ­தற்­கான ஒரே­யொரு வழி பொது வாக்­கெ­டுப்­புத்தான்' என்று பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும். 

அதற்கு முன் சிங்­கள குடி­யேற்­றங்கள் அகற்­றப்­ப­ட­வேண்டும்.

சிறை­யி­லுள்ள விடு­த­லைப்­பு­லிகள் அனை­வரும் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். -

ஐக்­கிய நாடுகள் மேற்­பார்­வையில் பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும். 

அது­மட்­டு­மன்றி, புவியில் எந்­தெந்த நாடு­களில் தமி­ழர்கள் புலம்­பெ­யர்ந்து வாழு­கி­றார்­களோ அங்­கெல்லாம் வாக்­குப்­பெட்டி வைத்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனக் கூறியிருந்தேன். 

 98 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்று பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறும் சந்தர்ப்பம் உருவாகும். 

இச்செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, தொப்புள்கொடியுறவுகளான தமிழக மக்களுக்கும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். 

இந்த உலகத்தின் பூர்வீக இனம் அழிக்கப்படுகிறது. .ஈழத்தமிழர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தேவை உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. 

எந்தவித உதவியுமின்றி 7 அணுவாயுத நாடுகளுடன் போரிட்டுக்கொண்டவன் தலைவன் பிரபாகரன். அவனுக்கு இணையாக பிடல்காஸ்ரோவையோ சேகு வேராவையோ ஒப்பிட முடியாது. 

தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்த மகத்தான தலைவர் பிரபாகரன். அவர் ஈந்த இரத்தமும் தியாகமும் வீண்போகாது. நான் அறுதியிட்டு கூறுவேன். பொது வாக்கெடுப்பொன்றின் மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். 

இக்கருத்தை ஈழத்தலைவர்கள் கூறியது கிடையாது.தமிழ் நாட்டு தலைவ ர்கள் முன்வைத்ததில்லை. வைகோ அறிவாளியாக இல்லாவிட்டாலும், இறந்துபோன மாவீரர்களின் ஆவி கூறிய நிலையில் பொதுவாக்கெடுப்பொ ன்றே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வென்று கூறினேன். 

அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறேன். 
பொதுவாக்கெடுப்பு நடக்கும் நடக்க வைப்போம்.