Breaking News

இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும் - சட்டத்தரணி சுகாஸ்

“வெளி­வந்­துள்ள இடைக்­கால அறி க்கை தமிழ் மக்­களை எவ்வ­கை­யி­லும் திருப்­திப்­ப­டுத்­தியாகவில்லை. தற்­போ­தி­ருக்­கும் ஆகக் குறைந்த அதி­கா­ரங்­க­ளை­யும் பறிக்­கு­ம் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது’’  சட்­டத்­த­ரணி கே.சுகாஸ்  வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கக் கேட்­கையில் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரி­விக்கையில் தமிழ் மக்­க­ளின் வாக்குகளை நிறை­வேற்­றாத ஒன்­றா­கவே இடைக்­கால அறிக்கை காணப்படுகின்றது. 

கடந்த காலத்­தில் நாம் எவற்றை முன்­வைத்து, அகிம்சை ரீதி­யாக தந்தை செல்வா காலத்­தி­லும் பின்­னர் தலை­வர் பிர­பா­க­ரன் காலத்­தில் ஆயுத ரீதி­யாகக் கேட்­டோமோ அவற்றுக்கு எதி­ராகவே இடைக்­கால அறிக்கை காணப்ப டுகின்றது.  

வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்­கை­யில் கூட்­டாட்சி என்ற பேச்­சுக்கே இடம்­கொ­டுத்தாக இல்லை. இது­வரை இருந்த ஒற்­றை­யாட்சி ஏற்­பா­டு­களை விட மிக­வும் பின்­தங்­கிய ஏற்­பா­டு­களே இதில் அடங்கியுள்ளன. 

வடக்கு – கிழக்கு இணைப்­பில்லை, பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்­கையை தமிழ்த் தலை­வர்­கள் நிரா­க­ரிக்க வேண்­டும். 

நாம் இந்த வரைவை ஏற்­றுக் கொண்­டால், தமிழ் மக்­க­ளின் இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­பட்­ட­தா­கவே பன்­னாட்­டுச் சமூ­கம் நோக்­கும். இவ்­வா­றான வரை­வு­களை முன்­னைய எமது தலை­வர்­கள் நிரா­க­ரித்­துள்­ள­னர். 

அத­னா­லேயே எமது விட­யம் பன்­னாட்டு அள­வில் பேசப்­பட்டுள்ளது.  

தற்­போது கிடைப்­பதை ஏற்­போம். மிகு­தி­யைப் போராடிப் பெறு­வோமென்ற எமது தமிழ்த் தலை­வர்­கள் கருத்து இது பிழை­. 

நாம் இந்த வரைவை ஏற்­றுக் கொண்­டால் எல்லா விட­ய­ முடி­விலும்  நாம் பொறிக்­குள் சிக்­கி­யுள்­ளோம். இத­னைத் தெரிந்தும் தமிழ்த் தலை­வர்­கள் ஏன் எதிர்க்­க­வில்லை. அரசு தமக்­குச் சார்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்­கேற்ற தமிழ்த் தலை­வர்­களை தம்வசப்படுத்தியுள்ளது. 

இருப்­பி­னும் தமிழ் மக்­கள் இடைக்­கால அறிக்­கையை எதிர்க்க வேண்­டுமெனத் தெரிவித்துள்ளார்.