பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்குச் சிறை
பெற்றோருக்குக் கீழ்படியாத பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சமூக மேம்பாட்டுக்கு பிள்ளைகளது பங்களிப்பு அபரிமிதமானது. சிறந்த பண்பாடு மற்றும் ஒழுக்க விழுமியங்கள் உடையவர்களாக அவர்கள் திகழ வேண்டும். தற்போதைய காலத்தில் எத்தனை பேர் அவ்வாறு காணப்படுகின்றனர் என்பது முக்கியமான கேள்வி. பெற்றோருக்கு கீழ்படியாத பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
எமது நாட்டில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அவர்களில் பெருவாரியானோர் முதியோர் இல்லங்களில் வசித்து வருகின்றனர்.
முதியோரின் நலன்கருதி சகல வசதிகளும் உள்ளடக்கியவிதமாக முதியோர் இல்லங்கள் மூன்றை அமைப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். தமது பிள்ளைகளால் பராமரிக்கப்படாத பெற்றோரின் வேண்டுகோளுக்கமைவாகவே புதிய முதியோர் இல்லங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன – என்றார்.








