Breaking News

தமிழ் மக்களுக்குரிய தீர்வை சம்மந்தன் ஊடாக தான் பெறமுடியும் - விஜயகலா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்க்க தரிசனமான முடிவை வழங்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (13.11) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சில கட்சிகள் வெளியேறி மாற்றுக்க ட்சியினை நிறுவதற்கு திட்டமிட்டுள்ளனர். மாற்றுக்கட்சி உருவாகுவதை அனுமதிக்கின்றீர்களா என ஊட கவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவி த்தார். 

மேலும் தெரிவிக்கையில்... வடகிழக்கில் தமிழீ ழம் கோரி, எமது இளைஞர்கள் ஆயுதப் போரா ட்டத்தினை முன்னெடுத்து,  போராட்டம் நிரா கரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை காணப்படுகின்றது. 

போா் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடி யும். 

யுத்தம் நிறைவடைந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, இன்று எமது தலைவராக எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக உருவாகியுள்ளார். 

தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார்.இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வரு டத்தினை எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் ஆயுதங்களை தந்தால், பழைய யுத்த நிலைக்கு வரமாட்டோம். எத்தனை பிறவி எடுத்தாலும், அதை மீண்டும் முன்னெடுக்க முடியாது. 

அது பொய்யான கூற்று. சிலருக்கு சில ஆசைகள் இருக்கின்றன. அதற்காக சில கட்சிகளை உடைத்து விடுகின்றார்கள். அதற்கு இடமளிக்காது. இன்று உள்ள தலைவர்கள் இனவாதம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். 

நாளை அமையப் போகும் தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், இனவாதிகளாகவே இருப்பார்கள். இனவாதிகளுடன் பேச முடியாத காரணத்தினால், இங்குள்ள சிறு சிறு கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கவும் கூடாது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும், சர்வ தேசத்திலும் போற்றக்கூடியவராகவுள்ளார்.  எனவே சம்பந்தன் ஊடா கவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினை முன்னெடுக்க  முடியும். வட கிழக்கு இணைப்பையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீர்வு திட்டத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார். 

இன்று வடகிழக்கு இணைப்பு ஏற்படக்கூடாதென்று, நாங்கள் எங்களுக்குள் அடிபடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். அதற்கு இடமளி க்காது. எமது சிறு சிறு கட்சிகள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தன் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து நடப்பது போன்று, சிறு சிறு கட்சிகள் விட்டுக்கொடுத்து, இவற்றின் ஊடாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும். 

சிறு சிறு கட்சிகளாக 12 உருவாகினால், வேறு கட்சிகள் இங்கு தமது கட்சிகளை நிலை நிறுத்தக்கூடும். அதற்கு இடமளிக்காது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன், பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.