தமிழர்கள் மீது இராணுவம் அத்துமீறல் க - ஏ.பி நிறுவனத்துக்கு கடிதம்-முதலமைச்சர்
வடக்கில் தமிழர்கள் மீது இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கண்ட னம்.
சர்வதேச ஊடகச் செய்தி நிறுவன மொன்றுக்கு சமர்ப்பித்துள்ள கடித த்தில் வெளிப்படையாக விவரித்து ள்ளார். இச் சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை முன் னெடுக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஏற்க னவே கோரிக்கை கோரியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனோ துரதிஷ்டவசமாக, அது கவனத்தில் எடுக்கப்படவில்லையென மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேசப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், இத்த கைய இராணுவ அநீதிகள் நடைபெறுவதற்கு தடையாக அமைந்திருக்கும்' என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவரித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக, கடந்த புதன்கிழமை ஊடகம் நிறுவனம் ஒரு ஆய்வை வெளிக்கொணர்ந்துள்ளது.
அது தொடர்பாகவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.