Breaking News

அரசின் வரவு – செலவுத்திட்டம் தமிழ் மக்களுக்கு நன்மையென - சம்பந்தன், சுமந்திரன்

தமிழ்மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் அமைந்துள்ளதென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அறிவிப்பு 

நாடாளுமன்றத்தில் கடந்த வியாழ க்கிழமை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும்; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களு க்கும் நன்மை அளிக்கும் வகையில் அரசாங்கம் வரவு – செலவுத்திட்டத்தை உருவா க்கியுள்ளது.  அரசு முன்வைத்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள உள்ளடக்கங்களை ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

அதேவேளை, அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் தமிழ்மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் வகையில் அமைந்திருக்கிறது எனவும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே அதன் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

 நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு முன்வைத்திருந்த யோசனைகள் வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்ப ட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.