Breaking News

பிரத்தியேக வகுப்பு சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - ஆசிரியர் வவுனியா

வவுனியாவில் கணித பாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறு வன் ஒருவருக்கு பிரத்தியேக பரீ ட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரி வித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்ற த்திற்காக இன்று வவுனியா மேல் நீதி மன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் குறித்த ஆசிரியரை குற்ற வாளியாக அடையாளப்படுத்தியதையடுத்து இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் பிற்போடப்பட்டுள்ளது. நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாக அடை யாளங் கண்டதையடுத்து  "இவ் வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு இலவசமாக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு எதிராக தன்னை அவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும்" என நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.  

2011ஆம் ஆண்டு செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில் 10ஆம் வகுப்பு படித்த சிறு வன் ஒருவரை 34 வயது நிரம்பிய, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணித பாட ஆசிரியர் தனது வீட்டிற்குப்பக்கத்தில் தனியார் வகு ப்பு ஒன்றினை நடாத்தியதுடன் மாணவர்களை பரீட்சைக்கு பிரத்தியேகமாக தயார்ப்படுத்துகின்ற சேவையையும் மேற்கொண்டுள்ளார்.  

பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிரத்தியேக வகுப்பிற்கு வந்து இரவில் அவரது வீட்டில் தங்கி நின்று படித்த 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக சாட்சிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அடுத்த வாரத்திற்கு பிற்போட்டுள்ளார்.