பிரத்தியேக வகுப்பு சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - ஆசிரியர் வவுனியா

2011ஆம் ஆண்டு செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில் 10ஆம் வகுப்பு படித்த சிறு வன் ஒருவரை 34 வயது நிரம்பிய, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணித பாட ஆசிரியர் தனது வீட்டிற்குப்பக்கத்தில் தனியார் வகு ப்பு ஒன்றினை நடாத்தியதுடன் மாணவர்களை பரீட்சைக்கு பிரத்தியேகமாக தயார்ப்படுத்துகின்ற சேவையையும் மேற்கொண்டுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிரத்தியேக வகுப்பிற்கு வந்து இரவில் அவரது வீட்டில் தங்கி நின்று படித்த 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக சாட்சிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அடுத்த வாரத்திற்கு பிற்போட்டுள்ளார்.