கோத்தாவை கைது செய்வதா? இல்லையா? தீர்மானிக்கும் நீதிமன்றம் - இன்று

டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணிப்பின் அரச பணத்தை தவறாக பய ன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ சந்தேக நபராக கருதப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொன்டே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனை தீர்மானிக்கவுள்ளது.
நேற்று முன்தினம் கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணியான சனத் விஜேவர்தனவினால் மேன் முறையீட்டு நீதிமன்றில் குறித்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவானது நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன ஆகிய இருவர் கொன்ட நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே இந்த ரீட் மனுவை தொடர்ந்து விசாரணை செய்வதா, முன்னாள் பாதுகாபபு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது அச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக செயற்படவோ பொலிஸாருக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இந்த ரீட் மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான கோத்தாபய நந்த சேன ராஜபக்ஷ சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மன்றில் ஆஜரானார்.
இதன்போது, அரச பணம் 90 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தனது சேவை பெறுநரான கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய நிதிக் குற்றப் புலனாயவுப் பிரிவு முயற்சிப்பதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை, உதவி பொலிஸ் அத்தியட்சரின் சான்றிதழ்களும் சமர்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கோத்தாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் இந்த விவகாரமானது முற்று முழுதாக சிவில் கொடுக்கல் வாங்கல் ஒன்று மட்டுமே என தெரிவித்துள்ளார்.
எனினும் சிவில் சட்டங்களின் கீழ் ஆராயப்படவேண்டிய இந்த விடயம் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் புரியப்பட்ட குற்றமாக பார்க்கப்படுவது, கோத்தபாயவை கைது செய்து பிணை இன்றி சிறையில் அடைக்கும் சதித்திட்டம் என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேன் முறையீட்டு மன்றில் வாதிட்டார்.
இந் நிலையிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது அச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக செயற்படவோ பொலிஸாருக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை இன்று அறிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக நேற்று முன் தினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய எத்தனிப்பதை தடுத்து, நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழான அறிக்கை, உதவி பொலிஸ் அத்த்யட்சரின் சான்றிதழ் என்பனவற்றை வலுவிழக்கச் செய்யுமாறும் அந்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது.
13 பக்கங்களைக் கொண்ட குறித்த ரீட் மனுவில் மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, நிதிக் குற்றப் புலனாயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்கிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் கமல் பலிஸ்கர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக தாககல் செய்யப்பட்டுள்ள மேற்படி ரீட் மனுவில் 111 விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரரான கோத்தபாய 7 நிவாரணங்களை அதனூடாக கோரியுள்ளார்.
பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவது, பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் , அதன் திருத்தங்களின் பிரகாரம் 8 (1) அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், உறுதிச் சான்றிதழை வலு இழக்கச் செய் வது, மனுதாரருக்கு எதிராக பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம், அதன் திருத்தங்களின் பிரகாரம் 8 (1) அத்தியாயத்தின் கீழ் செயற்பட பிரதிவாதிகளுக்கு எழுத்து மூல தடை உத்தர்வு பிறப்பிப்பது,
நீதிவான் நீதிமன்றில் உள்ள 60485/4/15 எனும் வழக்கை, பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 8(1) ஆம் அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சான்றிதழை அடிப்படையாக கொண்டு முன்னெடுப்பதை தடுக்கும் வகையில்
இடைக்கால தடை உத்தரவு, இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை ஏ 30 என குரிப்பிடப்பட்டுள்ள பொதுச் சொத்து என்பதை உறுதி செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சரின் சான்றிதழுக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிப்பது, வழக்கு செலவு மற்றும் நீதிமன்றம் தீர்மானிக்கும் ஏனைய சலுகைகளைப் பெற்றுக்கொள்வதை நிவாரணங்களாக கோரியே இந்த மனு தாக்கல் தொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வீரகெட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்ஷ மன்றம் தொடர்பில் அரச பணம் 900 இலட்சம் ரூப பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தி கோவைகளை சட்ட மா அதிபருக்கு அனுப்பி ஆலோசனை கோரியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் நிதிக் குற்றப் புலனா ய்வுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலை யிலேயே கைதை தடுக்கும் வண்ணம் ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.