குறைபாடுடைய தீர்வை ஏற்றால் தமிழ்ச் சமூகம் பாதிக்கப்படும்-முதலமைச்சர்!
அரசாங்கம் முன்வைக்கும் குறைபாடுகளைக் கொண்ட அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், எதிர்கால தமிழ் சமூகமே பாதிக்கப்படையுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவரித்துள்ளார்.
வட மாகாணத்தில் மக்களின் செறிவை மாற்றுவதற்கு பல விதமான பிரயத்தன ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான சூழலில் அரை குறையான அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால் அது பாரதூரமான பின்விளைவுகளுக்கே வித்தி டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், இணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பி னர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.
இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வைத்தியர் பீ.லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் ரீ.வசந்தராஜா ஆகியோருடன், ஈ.பீ.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துள்ளனர்.
இக் கூட்டத்தில் இடைநடுவில் காரணமொன்றை கூறி வெளியேறிய வடமா காண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதன் பின்னர் கூட்டத்தில் பங்கேற்கவில்லையென தகவல்கள் கசிந்துள்ளன.
அரைகுறை அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால் எதிர்கால தமிழ் சமூகமே பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளுமென தாம் இதன்போது வலியுறுத்தி யதாக சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
கட்சிக்கு உழைப்பவர்களை அன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய தகைமை உள்ளவர்களை எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவி த்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் பிரிந்து செல்லாமல் ஒன்றி ணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்திய சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை, கட்சி ரீதியாக செயற்படாது எனவும் அதுவொரு மக்களின் இயக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.