Breaking News

தமிழ்மக்கள் வாழும் நாடுகளில் தனிநாட்டினைக் கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்

தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவ திலும் விட அதிகளவான தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடு ஒன்றில் ஒரு பகுதியைத் தனிநாடாகக் கோருங்கள் என சிரேஷட விரிரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கேட்டுள்ளார். 
எதிர்பார்ப்புகளை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகா ப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்ப ட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழு ம்பில் இடம்பெற்றுள்ளது. 

அச் சந்திப்பில் கலந்து  கருத்துரை க்கையில் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழர்களுக்கு என்னதான் பிரச்சினை இருக்கின்றது என்று நான் ஆழமாக யோசித்துப் பார்த்தேன். அவர்களுக்கென்று தனி ஒரு நாடு இல்லாமையே பிரச்சினை ஆகும். இந்தப் பிரச்சினையை அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று அல்லது மலேசியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஒருபகுதியைத் தனிநாடாகக் கோரலாம் எனத் தெரிவித்து ள்ளார். 

இவ்வுலகினில் இலங்கையை விடவும் அதிகளவான தமிழ்மக்கள் வாழ்கின்ற நாடுகள் உள்ளன. அங்கு சென்று சுயநிர்ணய உரிமையுடன் அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள் அப்படிப் பெறுவார்களாயின் எங்களால் முடியுமான வற்றை நாங்கள் சிந்தித்துக் கூறுவோமெனத் தெரிவித்துள்ளார்.