
முக வலைத்தளங்களில் பேஸ்புக்கி ற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டுவி ட்டருக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது 140 கேர க்டருக்கு பதில் 280 கேரக்டராக டுவி ட்டரில் மாற்றம் செய்த பின் அத ற்கான ஆதரவு மேலும் அதிகரித்து ள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் தலைமை செயல் அதிகாரியாக பணி புரிந்த அந்தோணி நோட்டா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து ள்ளார்.
இவர் கலிபோர்னியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணி புரியவே டுவிட்டரில் இருந்து விலகிய தாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் டுவிட்டரில் பணியில் சேர்ந்த அந்தோணி நோட்டா டுவிட்டரில் வளர்ச்சிக்கு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து டுவி ட்டரின் வருமானத்தை பெருக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.