Breaking News

இறுதி சடங்குகள் முடிந்த ஸ்ரீதேவியின் உடல்; மின் மயானத்திற்கு தயார்;

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகப்பெ ரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார் அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் செய்திகள் வெளியிட்டார். ஸ்ரீ தேவி அவர்களது உடல் பிரேத சோதனைக்கு பிறகு, அவர் இறந்ததற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில் மது போதையில் தவறி விழு ந்து உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியானது. நேற்று முன் தினம் காலை அவரது உடல் இந்தியா வந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், தாமதமாகி நேற்று இரவு இந்தியா வந்துசேர்ந்தது. இந்த நிலையில், இன்று போனி கபூரின் தம்பி வீட்டில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வில்லிபார்லியில் உள்ள மின் மயான த்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
பல பிரபலங்களும் அவர்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஸ்ரீதேவியின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக அலங்கரிக்க பட்டு இந்திய கோடி மூலம் போற்றப்பட்டிருக்கிறது. அவரின் அருகே கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் இருவரும் கவலையாக நின்றுகொண்டிருக்கிறார்கள். மேலும் இறுதி ஊர்வலத்திற்கு போனி கபூர் மட்டும் ஸ்ரீதேவியின் உடலுடன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சில ஆண்களுடன் சென்று கொண்டிருக்கிறார்.