இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை தெரிவித்தது த.தே.கூ!.
ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சிய மைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுப்போமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்து ள்ளது.
இலங்கையின் அரசியல் நிலைப்பா ட்டில் தற்போது நிலவிவரும் அரசி யல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசா ங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுப ட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசா ங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சு க்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின், எமது கட்சியின் மத்திய செய ற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளு மென மேலும் தெரிவித்தார்.