Breaking News

“சம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும்”

நல்லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூராட்சி தேர்­தலில் பிர­தி­ ப­லித்­துள்­ளது.

கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உறுப்­பி­னர்கள் மக்­களை தொடர்ச்­சி­யாக ஏமாற்றி வந்­ததன் பயனே பாரிய தோல்­விக்­கான முதற்­ கா­ரணமென தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர விவ ரித்துள்ளார். 

தமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் வாழ வேண்­டு­மாயின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் போன்­ற­வர்கள் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டுடிமனவும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி அமோக வெற்­றியை அடைந்­துள்­ளமை தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் .

 மேலும் விவரிக்கையில்.....

நாட்டு மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தான்­தோன்­றித்­த­ன­மான ஆட்­சிக்கு எதி­ரா­கவே தமது வெறுப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். நாட்டு மக்­க­ளுக்­காக அல்­லாமல் மேற்­கத்­தைய நாடு­களின் அதா­வது இந்­தியா,சீனா போன்ற நாடு­களின் விருப்­பத்­திற்கே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் செயற்­பட்­டனர். 

அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி சகல துறை­க­ளிலும் துறைசார் சர்­வா­தி­கா­ரமே காணப்­பட்­டது. நல்­லாட்சி என்ற பெயரில் நாட்டை பிள­வு­ப­டுத்­தவே முற்­பட்­ட னர். குறித்த விட­யத்தில் நாட்டு மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். நாடு பிரிக்­கப்­பட்டால் குறித்த ஒரு தரப்­பிணர் மாத்­திரம் நன்மை அடைவர். 

நாட்டைப் பிரிப்­பதால் தமிழ் அர­சியல் வாதி­களின் ஒரு சிலரே நன்மை அடை வர். குறிப்­பாக எதிர்க் கட்சி தலைவர் புலம்­பெ­யர்வாழ் தமி­ழர்­களை மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மலை­நாட்டு பிர­தே­சங்­களில் நலனை பற்றி ஒரு­பொ­ழுதும் நினைக்­க­வில்லை. 

ஆனால் அவர்­களே தமிழ் மக்­களின் ஒரு­மைப்­பாடு பற்றி பேசு­கின்­றனர். வட­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்கள் தற்­போது உண்மை நிலை­யினை அறிந்­துள்­ளனர். அவர்­களின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் பொய்­யான வாக்­கு­று­தி­களை முன்­வைத்­த­மையால் தற்­போது விரக்­தி­யுற்­றுள்­ளனர். 

நாட்டில் கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்­பான அனு­ப­வங்­களை மக்கள் மத்­தியில் மீண்டும் உரு­வாக்கி தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக தமிழ் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தினை உரு­வாக்க முயல்­வதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் ஒரு­மித்து வாழ­வேண்­டு­மாயின் சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் போன்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஒரு சிறந்த தலை­வரை உரு­வாக்கிக் கொள்ள வேண்டும். 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விற்கு ஆத­ரவு அளித்­த­வர்கள் சாதா­ரண பாமர மக்கள் குறிப்­பாக பல வழி­மு­றை­க­ளிலும் தமது உரி­மை­களை இழந்து வாழும் மலை­நாட்டு மக்கள் என்­பதை முழு நாட்டு மக்­களும் புரிந்துக் கொள்ள வேண்டும். 

வர­லாற்று புகழ் கொண்ட இலங்­கையின் அர­சியல் தற்போது தனது தூய்மை யினை இழந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சில தரப்பினர் அரசியலை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும். அன்று தான் நல்லாட்சி என்ற நாமம் முழுமையடையும் அதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்திலும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனத்  தெரிவித்தார்.