Breaking News

"தக்க தருணத்தில் தொண்டமான் எடுத்த முடிவு சரியானது" - பெரியசாமி பிரதீபன்.!

"மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூ ராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்ட மானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவே ற்கிறோம்" என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமை ப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். 11 உள்ளூராட்சி சபைகளை இல ங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இன்று நடை பெற்ற போதே பிரதீபன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், 

"மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சினை, மேல திக கொடுப்பனவான நிலுவை பிரச்சினை மற்றும் அபிவிருத்தி பிரச்சினை களுக்கு கடந்த மூன்று வருட காலமாக பாரியளவில் முகங்கொடுத்து வருகி ன்றனர். 

இச் சமயத்தில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பலத்தினை பெற்று தமது சக்தியை வெளிப்படுத்தி நாடளாவிய ரீதியில் மக்களின் ஆத ரவை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்படுவதற்கான முடிவினை தக்க தருணத்தில் ஆறுமுகன் தொண்டமான் எடுத்துள்ள முடிவு சரியானது என நாம் அவரை வரவேற்கின்றோம். 

சுயலாபம் கருதாமல் மலையகத்தில் வாழ்கின்ற குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட நகர் மற்றும் கிராம பகுதி மக்களின் பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு காத்திரமான கொள்கையுடன் இல ங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுவதற்காக இவ்வாறு கைகோர்த்து ள்ளமை வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர்களி னால் குறிப்பிடதக்க அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் செய்யப்படவில்லை. இந் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட்ட இ.தொ.கா மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து அபிவிருத்திகளை முன்னெ டுக்கவுள்ளது. 

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தனது ஆதரவை வழங்கும். உள்ளூராட்சி சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்திலும், வெற்றி லைச் சின்னத்திலும் இ.தொ.காவுடன் இணைந்து சேவல் சின்னத்திலும் மூன்று கோணங்களில் தேர்தலில் போட்டியிட்டது. 

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேவேளை தோட்டப்பகுதிகள், கிராம பகுதிகள், நகர் பகுதிகள் என அபிவி ருத்திகள் செய்யப்படுவதோடு, உருவாக்கப்படும் நல்லாட்சியில் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையக பெருந்தோட்ட த்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தகுதியான அமைச்சும் வழங்கப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றமையினால் எதிர்வரும் காலத்தில் அனைவரும் இணைந்து ஒரு நல்ல தனி ஆட்சியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது" என தெரிவித்தார்.