Breaking News

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள்; சிவாஜிலிங்கம் கடிதம்!

வடக்கு மற்றம் கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்த லில் ஜ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞா பனத்தில் வடக்கிழக்கில் 1000 விகாரகள் அமைக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக கூறப்படுவது இன, மத துரோக ங்களுக்கு வழி வகுக்கும் என்பதுடன் நல்லிணக்கத்தை பாதிக்கும் என கூறி மாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கள் தேர்தல் ஆணைக்குழுவு க்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேற்படி விடயம் தொடர்பாக இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கருத்து வழங்கிய சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் கூறுகையில், 

ஜ.தே.கட்சி உள்ளூட்சி சபை தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 1000 வி காரைகளை கட்ட 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளது. இது உண்மையில் மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடை யிலும் பாரிய துரோகத்தை உருவாக்கும். அதேபோல் நல்லிணக்கத்தினை பாதிக்கும். 

எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் வல்வெட்டித்துறை நகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர் ஒருவர் தேர்தல் காலத்தில் இந்து அமைப்புக்கள் கண்டனம் என ஊடகங்களில் வெளியான செய்து தொடர்பாகவும், கிறிஸ்த்தவ அமைப்பு ஒன்று கட்சி ஒன்றுக்கு வாக்க ளிக்குமாறு கேட்கும் தோரணையில் ஊடகங்களில் வெளியான செய்தி தொட ர்பாகவும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.