மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு ஆன சிவப்பு எச்சரிக்கை - மனோ
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெற்ற வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்க ப்பட்டுள்ள பெரும் சிவப்பு எச்சரிக்கை என அமைச்சர் மனோ கணேசன் தெரி வித்துள்ளார்.
2015ம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை விளங்கி நடைமுறை ப்படுத்த தவறிவிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன் னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும் என தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை விளங்கி நடைமுறை ப்படுத்த தவறிவிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன் னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும் என தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றிய போதே இவ்வாறு விவ ரித்தார்.
மஹிந்த ராஜபக்சவின் வாக்குகள் மஹிந்த ஆதரவு வாக்குகள் என்பதைவிட இந்த அரசாங்கத்துக்கு எதிரான பெரும்பான்மை ஆட்சேபனை வாக்குகள் என்ப தை இவர்கள் இருவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் ஒரே நாட்டுக்குள் வாழும் தீர்மானத்துக்கு வந்துவிட்ட தமிழ் அர சியல் தலைவர்களும் மகிந்தவின் மீள்வருகையை கணக்கில் எடுக்க முன்வர வேண்டும்.
தமிழர்கள் விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் இது தான் பெரு ம்பான்மை சிங்கள மக்களின் இன்றைய தீர்ப்பு என்பதை நாம் புரிந்திட வேண்டும்.
இம்முறை மகிந்த அணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாமையோர் சிங்கள பெளத்த வாக்காளர்களே.
எனினும் 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை தமிழ் மக்களுக்கும் பின் முஸ்லிம் மக்களு க்கும் எதிரான வெற்றியாக எண்ணி செயற்பட்டு தமிழ் பேசும் மக்களை அந்நியப்படுத்திக்கொண்டதை போல் இந்த வெற்றியையும் சிங்கள பெளத்த எழுச்சி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணியினர் அர்த்தம் கொள்ள கூடாது.
தனது வெற்றியை இலங்கை தேசிய வெற்றியாக கருதி தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய கொள்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க வேண்டும் அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடு த்துள்ளார்.