Breaking News

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது – சம்பந்தன் !

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஈடுபடாதென  கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

கூட்டு அரசாங்கத்துக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஐ.தே.க தனி த்து ஆட்சியமைக்கப் போவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கப் போவதாகவும், செய்தி கள் வெளியாகின. இது குறித்து கரு த்து வெளியிடுகையிலேயே  தெரிவி த்துள்ளார். “அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணியை அமைப்பது குறி த்து யாரும் பேச்சு நடத்த எம்மை அணுகவில்லை. அவ்வாறு யாரும் அணுகி னால், அது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான தெளிவான செய்தி ஒன்றை மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அந்த ஆணையை நாங்கள் மதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இவ் விவகாரம் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், “எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதன் முயற்சிகளுக்கு நாம் ஆத ரவு அளிப்போம். 

ஆனால், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது, எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.