Breaking News

முள்ளிவாய்க்காலில் மீட்கப்படாத வெடிபொருள் எச்சங்களால் மக்கள் அச்சம்!

முல்­லைத்­தீவு, முள்­ளி­வாய்க்­கா­ல் பகு­தி­யில் உக்­கிர மோதல்­கள் இடம்­பெற்ற பகு­தி­க­ளில் கைவி­டப்­பட்­டுள்ள வெடி­பொ­ருள்­க­ளின் எச்­சங்­க­ளின் சித­றல்­க­ளால் மக்­கள் அச்­சம் அடைந்­துள்­ள­னர். 

வெடி­பொ­ருள்­கள் மீட்பு, வெடிப்பு போன்ற சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக முள்­ளி­வாய்க்­கால் வலை­ஞர்­ம­டம், வட்­டு­வா­கல், புது­மாத்­தளன் போன்ற பகு­தி­க­ளில் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இந்­­த­நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் காலை­யும் வீட்­டுத்தோட்­டத்­தைத் துப்­ப­ரவு பணி­செய்து தீ மூட்­டி­ய­போது வெடிப்புச் சம்­ப­வம் ஒன்று நிகழ்ந்துள்ளதுடன் அய­லி­லுள்ள வீடு­க­ளுக்கு சிறு பாதிப்­புக்­கள் ஏற்­பட்­ட­போ­தும் உயி­ரா­பத்­துக்­கள் எது­வும் ஏற்­ப­ட­வில்லையென  தெரி­விக்கப்பட்டுள்ளது. முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் கடந்த 2012ஆம் ஆண்டு வெடி­பொ­ருட்கள் அகற்­றப்­பட்டு மக்­கள் மீள்­கு­டி­யேற்றப்­பட்­டுள்­ள­னர். 
குறித்த பகு­தி­க­ளில் வெடி­பொ­ருள்­கள் முற்­றாக அகற்­றப்­பட்­டுள்­ளன என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­ போ­தும் வெடி­பொ­ருட்களின் எச்­சங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இது­வரை 50க்கும் மேற்­பட்ட இவ்­வா­றான வெடிப்புச் சம்­ப­வங்­கள் மற்­றும் வெடி­பொ­ருட்கள் மீட்­கும் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. 

தற்­போது மக்­கள் வாழ் இடங்­க­ளில் வீடு கட்­டு­வ­தற்­கா­க­வும், ஏனைய தேவை­க­ளுக்­கா­க­வும் நிலத்­தைத் தோண்­டு­கின்­ற­னர். அத்­து­டன் காடு எரிக்­கும் போதும் சில ­வெ­டி­பொ­ருட்கள் வெடித்துச் சித­று­கின்­றன. 

மக்­க­ளால் அடை­யா­ளம் காணப்­பட்ட சில வெடி­பொ­ருட்கள் பொலி­ஸா­ருக்கு தக­வல் கொடுக்­கப்­பட்டு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு பின்­னர் நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய எடுக்­கப்­பட்டு அழிக்­கப்­படு­கின்­ற­ன. ஆனால் அடை­யா­ளம் காண ப்­ப­டாத வெடி­பொ­ருட்களால் அச்­சத்­து­டன் வாழ­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளதாக பிர­தேச மக்­கள் தெரிவித்துள்ளனர்.