யுத்த வேளையிலான இறப்புக்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய புதிய கணக்கெடுப்பு!

அண்மைய உள்ளூராட்சித் தேர்தல்களால் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைக ளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படுமென, தேசிய ஒருமை ப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
யுத்தகாலத்தில் இடம்பெற்ற மரணங்கள், காணாமல் போனவர்களின் எண்ணி க்கை, வன்னியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள், சந்தேக நபர்களின் எண்ணிக்கை என்பனவற்றை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் இக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்து நேரடியாக தகவல்கள் திரட்டப்படு கின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அது அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள ப்படவில்லை.