இரு நாட்டு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதே நோக்கம் - கொரியத் தூதுவர்
இலங்கைக்கும் - கொரியாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் மேலும் வலுவாக பல்துறைகளை உள்வாங்கும் வகையில் முன்னெ டுக்கப்படும். இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்துவதே தனது நோக்கம் என இலங்கைக்காக கொரிய தூதுவர் ஹீயோன் லீ தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் கொரியாவிற்கு சென்றமையானது இரு நாட்டு தலை வர்களுக்குமிடையிலான புரிந்துண ர்வு வலுவடைந்துள்ளது.
இந்நிலை யானது கொரிய முதலீட்டர்களின் ஆர்வம் இலங்கை பக்கம் திரும்புவ தற்கும் காரணமாகியதாகத் தெரிவி த்தார். இலங்கைக்கான கொரிய தூதரகத்தில் புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தூதுவர் ஹீயோன் லீ மேற்கண்டவாறு தெரிவித்தார்.