Breaking News

வெளி­நாட்டில் போரா­டு­ப­வர்கள் தமி­ழர்கள் அல்ல - கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல

தமி­ழர்கள் என்று வெளி­நா­டு­களில் போரா­டு­ப­வர்கள் தமி­ழர்கள் என்ற போர்­வையில் மாத்­தி­ரமே செயற்­ப­டு­கின்­றனர். இன,மத மொழி வேறு­பா­டுகள் இன்றி இலங்­கையர் என்ற ஒரு­மைப்­பாட்­டுடன் எம்­முடன் என்றும் இணைந்து செயற்­ப­டு­ப­வர்­களே தமி­ழர்கள் என கூட்டு எதிர்­க்கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

பிரித்­தா­னி­யாவின் இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு அதி­கா­ரியின் பணி நீக்கம் மற்றும் மீள் பணி­ய­மர்த்தல் விவ­காரம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

மக்கள் மத்­தியில் தமது அதி­கா­ரத்­தினை பிர­யோ­கிப்­பதில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் பாரிய போட்டித் தன்மை காணப்­ப­டு­கின்­றது. அதன் வெளிப்­பாடே பிரித்­தா­னி­யாவின் இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு அதி­காரி பிரி­கே­டியர் பெர்­னாண்­டோவின் பதவி நீக்கம் மற்றும் மீண்டும் பத­வியில் அமர்த்தல் என்­பன காணப்­ப­டு­கின்­றன. 

பிர­தமர் பதவி நீக்­கு­வதும், பின்னர் ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி மீண்டும் பத­வியில் அமர்த்து­வதும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே. பிர­த­மரின் கைப்பா­வை­யாக செயற்­ப­டு­வதை ஜனா­தி­பதி பிணைமுறி விவ­கார த்தில் நிரூ­பித்­து ­விட்டார். 

திரு­ட­னி­டமே திருட்டின் திட்­டத்­தினை கேட்­ட­மை­யா­னது இணக்­கப்­பா­டற்ற தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா ­தி­பதி 2015ஆம் ஆண்டு தொடக்கம் வெறும் நாம நிர்­வா­கி­யா­கவே செயற்­ப­டு­கின்றார். 

எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் மக்­களின் ஆத­ர­வினை பெற்று ஐக்­கிய தேசிய கட்­சியின் சகல வித­மான தொடர்­பு­க­ளிலும் இருந்து விடுபட முயல்­கின்­ற­மை­யினை தேர்தல் பிரசா­ரங்­களில் வெளிப்­ப­டுத்தி வரு­கின்றார். தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் பாரிய இணக்­கப்­பா­டற்ற தன்மை காணப்­ப­டு­கின்­ற­து.

ஐக்­கிய தேசிய கட்சி தற்­போது மோச­டியால் தமது பாரம்­ப­ரிய அர­சியல் வர­லாற்றின் பெரு­மை­களை இழந்து விட்­டது. எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் பொது­மக்கள் நல்­லா ட்சி என்ற போர்­வையில் கபட நாட­கத்­தினை அரங்கேற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆவலாக உள்ளனர். பாரிய மாற்றத்தினை எதிர்கொள்ள இரு பிரதான கட்சிக ளும் தயாராக இருக்க வேண்டும். தாமரை மொட்டின் வெற்றி தற்போது உறு தியாகி வருவதாகத் தெரிவித்தார்.