Breaking News

ஊழ­லுக்கு எதி­ரான எனது நகர்வில் எவ்­வித மாற்­றமும் கிடையாது.!

ஊழல் மோச­டிக்கு எதி­ரான எனது கருத்தில் எவ்­வித மாற்­றமும் இல்லை. மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டங்­களை மோச­டிகள் இடம்பெறாத வகையில் உரிய முறை­யிலும் வெளிப்­படைத் தன்­மை­யு­டனும் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன் என ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வி த்துள்ளாா். 

பொலன்­ன­றுவை கிரித்­தலே குடி­யே ற்­றத்தில் உள்ள கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில் நேற்று புதிய வகுப்­பறை கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளி க்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றுகையில் ஜனா­தி­பதி மேற்கண்டவாறு தெரிவித்தா்.

மேலும் தெரிவிக்கையில்....

”எழுச்­சி­பெறும் பொலன்­ன­றுவை” மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­ட த்தின் கீழ் 06 மில்­லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்­பறை கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது நாட்டின் விவ­சாய சமூ­கத்­திற்கு முன்­னைய எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத நிகழ்ச்சித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உலர் வல­யத்தில் 2400 குளங்­களை அபி­வி­ருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்­வ­ருடம் ஆரம்­பிக்­கப்­படும். 

இதன் கீழ் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் மட்டும் 123 குளங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது. கடந்த 60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மாவட்­டத்தில் உள்ள மக்கள் முகங்­கொ­டுத்த நீர் தொடர்­பான பிரச்­சி­னைகள் இவ்­வ­ருட இறு­திக்குள் நிரந்­த­ர­மாக தீர்த்­து ­வைக்­கப்­படும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள 240 பாட­சா­லை­களில் 142 பாட­சா­லை­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய வகுப்­பறைக் கட்­டி­டங்­களை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்­வு­க­ளுக்கு தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. கல்­வித்­து­றைக்கு தேவை­யான வச­தி­களை வழங்­கு­வ­தைப்­போன்று பரீட்­சை­களில் மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள பாட­சாலை மாண­வர்­களின் பரீட்சை பெறு­பே­று­களில் உள்ள பல­வீ­னங்­களை இனங்­கண்டு மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை பாட­சாலை அதி­பர்கள் மற்றும் கல்வி அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளேன். 

எவ்­வாறு இருப்­பினும் இந்த நாட்டில் ஊழல் இல்­லாத சமு­தாயம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே நான் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். எனினும் ஊழல் குற்­றங்­களை ஒழிக்கும் எனது வேலை த்­­திட்­டங்­களை நான் ஒரு­போதும் கைவி­டப்­போ­வ­தில்லை. 

ஊழல் மோசடிக்கு எதிரான எனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் நடைபெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளாா்.