Breaking News

ஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ எச்சரிக்கை.!

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகவேண்டும் என்று ம.தி.மு.கட்சியின் பொதுசெயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... 

"தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்று 6 மாதங்களில் பல் வேறு சர்ச்சைகளின் நாயகராகக் காட்சி அளிக்கிறார். ஆளுநருக்கு அர சியல் சட்டம் வழங்கியுள்ள அதிகா ரத்தை வானளாவ அதிகாரமாக எடுத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியவாறு உள்ளனா். 

தமிழக அரசின் மற்றொரு தலைமை செயலகமாக ராஜ்பவன் செயல்படுகின் றது என்று ஏற்கனவே நான் சுட்டிக்காட்டி இருக்கின்றேன். தமிழக அரசு பணி கள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தல், அரசு உயர் அதிகாரிக ளுக்கு நேரடியாக உத்தரவு போடுதல், தொழில் தொடங்குவதற்கு ராஜ் பவனை நாடுங்கள் நான் ஏற்பாடு செய்வேன் என்று அறிவித்தல் போன்றவை ஆளுநர் புரோஹித்தின் வரம்பு மீறிய செயல்களாகும். 

வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை, அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், இந் துத்துவ அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரை தமிழக பல் கலை கழகங்களின் துணை வேந்தர்களாக நியமித்து வருகின்றார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசின் முதல்வரை விட தாம் ஒரு சூப்பர் முதல்வர் என்பது போன்று ஆளுநர் புரோஹித் தம்மைக் காட்டிக்கொண்டு வருவது கடு மையான கண்டனத்திற்குரியது. 

தற்போது அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற உரையாடல் அம்பலம் ஆகி சந்தனம் மணக்கவேண்டிய கல்வித்துறை சாக் கடையாக மாறிவிட்டதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

புனிதம் நிறைந்ததும், வருங்கால தலைமுறையை வார்ப்பிக்கும் மாண்பும் கொண்டதுமான ஆசிரிய அரும்பணிக்கு தீராத களங்கத்தை நிர்மலா தேவி போன்றவர்கள் ஏற்படுத்தி உள்ளது அருவருக்கத்தக்கது. கல்வி பயிர் செழிக்க வேண்டிய சோலையில் இது போன்று வளரும் நச்சுச் செடிகளை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ள நிலையில் அவசர அவசரமாக ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்கவேண்டிய தேவை என்ன? அங்கே அவர் நடந்துகொண்ட முறையை பெண் செய்தியாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளாா். 

ஏற்கனவே தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பங்கேற்றபோதும் இது போன்ற நிகழ்ந்தததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஆட்சியில் துறை அதிகாரி சந்தானத்தை ஒரு நபர் விசாரணை ஆணையமாக ஆளுநர் நிய மித்தது சட்ட மீறல். அதற்கான அதிகம் ஆளுநருக்கு கிடையாது. 

அவரே புகார் வளையத்திற்குள் சிக்கி இருக்கும் போது அவர் நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது. உண்மை யான குற்றவாளிகள் தப்பிக்கவே இந்த ஏற்பாடு. எனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலையிட வேண்டும். 

நேர்மையான விசாரணை நடத்தி யாருக்காக அவர் இவ்வாறு செயற்பட்டார் என்ற உண்மையை வெளிக்கொணர வேண்டும். அந்த நபர்களை கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், தமிழக நலன்க ளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இரு க்கின்ற பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர் பொறுப்பில் நீடிப்பது மானக் கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டுமென வலியுறுத்துகி றேன்." என அவ்வறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளாா்.