Breaking News

வெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே- மேர்வின் சில்வா.!

வெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்த ரவுகளை வழங்கிய கோத்தபாய ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்கு எவ ருக்கும் முதுகெலும்பு இல்லையெனத் தெரிவித்துள்ளார்.


உத்தரவு இன்றி எதுவும் நடைபெற்றி ருக்க முடியாது எனக்குறிப்பிட்டுள்ள மேர்வின் சில்வா வெள்ளை வான் கட த்தல்களிற்கான உத்தரவினை பாது காப்பு அமைச்சரோ அல்லது பாது காப்பு செயலாளரோ வழங்கியிருக்க வேண் டுமெனத் தெரிவித்துள்ளாா். 

2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளிற்காகவும் கோத்தபாய ராஜ பக்ஷவை விசாரணை செய்யவேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்து ள்ளார். பாதள உலகத்தவர்களுடன் எவருக்காவது தொடர்பிருந்தால் அவர் உடனடியாக கொலை செய்யப்பட்டார் இது குறித்து பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லையென மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

பொலிஸார் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமெனக் கேட் டுக்கொண்டுள்ள மேர்வின் சில்வா படுகொலைகளில் ஈடுபடுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமையில்லையெனத் தெரிவித்துள்ளாா்.