Breaking News

சம்பந்தன் பதவி வகிப்பதில் அர்த்தம் இல்லை - சுரேஷ் பிறேமசந்திரன்.!

இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான புதிய அரசியல் சாசனத்தை தயாரிப்பதற்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமாக இருப்பினும், 

தமிழ் மக்களின் அவசரப் பிரச்சனை களுக்கு தீர்வு காண முடியாத நிலை யில் வெறுமனே எதிர்கட்சித் தலை வர் பதவியை வகிப்பதில் அர்த்தம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சி யான ஈபி ஆர்எல் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார். 

இதனால் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் சம்பந் தன் மைத்ரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங் கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உபயோகிக்க முடியுமெனத் தெரிவித் துள்ளாா். 

மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந் தித்த சுரேஷ் பிறேமசந்திரன் இவ்வாறான தகவலைத் தெரிவித்துள்ளாா்.