பரபரப்பான சூழலில் இன்று கூடுகின்றது சுதந்திர கட்சியின் மத்திய குழுச் சந்திப்பு.!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தி யில் கட்சியின் மத்திய குழுச் சந்திப்பு இன்று நடைபெறும்.
எதிரணியில் அமரவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்க ளும் தமது இறுதி நிலைப்பாட்டினை இன்று முன்வைப்பாா்கள் எனத் தக வல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுள் அமைச்சுப் பதவிகளை வகித்த அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமை மற்றும் 16 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியில் அமரவுள்ளதாக கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் இன்று ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய குழு கூடுகின்றது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தை அடுத்து கட்சிக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்திருந்தன.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச்செயலாளர்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சியில் அமர ஜனாதிபதி அனுமதி வழ ங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இன்று கூடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் இரு ப்பதா அல்லது தனித்துச் செயற்படுவதா என்ற கேள்விக்கான விடையும் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் தெரிய வருமென ரணில் எதிர்ப்பு அணி யினர் தெரிவித்துள்ளனா்.