Breaking News

நிதிக்குற்றங்களை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை - மங்கள சமரவீர

இலங்கை அரசாங்கம் நிதிக்குற்றங்களை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் தெரிவித்து ள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கலந்துரை யாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கை யிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

நிதியமைப்பு முறை வளர்ச்சியடை ந்து வருகின்ற நிலையில் நிதிக்குற்ற ங்களை தடுப்பதற்கான சட்டங்களை யும் விதிமுறைகளையும் தரமுயர்த்த வேண்டுமென அமைச்சர் தெரிவித்து ள்ளாா். 

இலங்கை இவ் யதார்த்தத்தை நன்கு உணர்ந்துள்ளது. இதன் காரணமாக இவ் விடயமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். நிதிக்குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் நிதி நடவடிக்கைகள் தொடர்பான செயலணியுடன் இணைந்து செயலாற்றுகின்றது. 

இது தொடர்பான சட்டங்களை பலப்படுத்துகின்றது. நிதி நடவடிக்கைகள் தொடர்பான செயலணியின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட திருத்தங் களை மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.