Breaking News

ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பு - ரஞ்சித் மத்தும பண்டார.!

நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கை யும் பாதுகாப்பதற்காக திட்டமிட்ட குற்றச் செயல்களையும், போதைப் பொருளையும் கட்டுப்படுத்த உச்ச நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளாா். 

மேற்படி அமைச்சின் செயலாளர் மற் றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் நேற்றைய தினம் நடத்திய ஊடக வியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு விவரித்துள்ளாா். 

மேலும், பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக இதுவரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ரஷ்யாவின் முன்னாள் தூது வரை இலங்கைக்கு மீள அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள தாகவும், இதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவ தாகவும் தெரிவித்துள்ளாா். 

இதேவேளை, துறைமுகம் மற்றும் தெற்கு, மேல், கரையோரப் பிரதேசங்கள் ஊடாக நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாக இனங்காணப் பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கையை முன் னெடுத்துள்ளனா். 

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ் சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளாா்.