பெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை தெரிவித்தாா் - பிரதமர்
இலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்டியுள் ளது.
இக் காரணத்தினால் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை போக் கும் நோக்கில் மாற்று வழியை கையாண்டு வருமானம் ஈட்டவே பெற்றோலின் விலையை அதி கரித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
இக் காரணத்தினால் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை போக் கும் நோக்கில் மாற்று வழியை கையாண்டு வருமானம் ஈட்டவே பெற்றோலின் விலையை அதி கரித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை காலி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக காரியாலத்திற்கான புதிய கட்டடங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திற ந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேலும் விவரிக்கையில்.....,
உலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலரினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் நட்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தி னால் சுமக்க முடியாது.
அத்துடன் சவுதி அரேபியா எரிப்பொருளின் விலையை 80 டொலராக அதிக ரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியிடு கின்றன.
எவ்வாறாயினும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் உலக சந் தையில் எரிப்பொருளின் விலை குறைவடையும் என நம்புகின்றோம்.
அப்படி குறையும் போது அந்த சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு நானும் ஜனாதிபதியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.
2016 ஆம் ஆண்டு தொட க்கம் தற்போது வரை உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்தது.
இதன்படி 41 டொலரினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் உலக சந்தையின் விலையேற்றத்திற்கு ஏற்ப பெற்றோலிய கூட்டு தாபனம் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை கடந்த வியா ழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.