Breaking News

நன்றிக் கடனிற்காக அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாக - மஹிந்த

தேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக் கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­வதாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.                                 

பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு ­வ­ரப்­ப­ட­வுள்ள குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழை ப்பை வழங்கும் சட்ட திருத்தம் குறி த்து அவர் விடுத்­துள்ள விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரிவித்துள் ளார்.

 மேலும் கூறு­கையில்.

தற்­போ­தைய கூட்­டணி அர­சாங்கம் குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்­டத்தை திருத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அறிய முடிந்­துள்­ளது.

 2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பாக பரஸ்­பர ஒத்­து­ழைப்பு வழங்கும் சட்­டத்தை திருத்­து­வ­தற்­காக சட்­ட­மூல நகல் பத்­தி­ர­மொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்துள்ளது. 

அதன் ஒரு கட்­ட­மாக குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொண்டு சர்­வ­தேச தலை­யீ­டு­களை பலப்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ளதாகத் தெரிவித்துள்ளாா்.