Breaking News

5 மணிநேர விசேட விசாரணை - தயாசிறி ஐசேகரவிடம்.!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரு மான தயாசிறி ஜசேகரவிடம் சி.ஐ.டி.யினர் நேற்று 5 மணிர நேரம் விசேட விசா ரணையொன்றை முன்னெடுத்துள்ளனா். 


மத்­திய வங்­கியின் பிணை முறி மோசடி விவ­கா­ரத்தில் சந்­தேக நபர் பட்­டி­ய லில் உள்ள பேப்­பர்­ச்சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான வோல்ட் என்ட் ரோ நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து ஒரு மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான காசோ­லையை பெற்ற குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மத்­திய வங்­கியின் பிணை முறி மோசடி விவ­கா­ரத்தில் சந்­தேக நபர் பட்­டி­யலில் உள்ள பேப்­பர்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் துணை நிறு­வங்­க­ளான இரு மது­பான நிறு­வங்கள் (டப்­ளியூ எம். மென்டிஸ், வோல்ட் என்ட் ரோ), பேப்­பர்ச்­சுவல் எசட் மெனேஜ்மென்ட், பேப்­பர்ச்­சுவல் கெபிடல் பிரைவட் லிமிடட், பேப்­பர்ச்­சுவல் கெபிடல் ஹோல்டிங்ஸ் பிறைவட் லிமிடட் ஆகி­யவை ஊடாக பல­ருக்கு பல்­வேறு சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் பணம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு சந்­தே­கிக்­கின்­றது. 

இந் நிலையில் டப்­ளியூ. எம். மென்டிஸ், வீல்ட் என்ட் ரோ நிறு­வ­னங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பிர­ப­லங்­க­ளுக்கும் காசோலை வடிவில் பணம் வழங்­கி­யமை சி.சி.டி.யால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 

இந் நிலையில் கடந்த 2015. ஜூன் 13 ஆம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கு வோல்டன் என்ட் ரோ நிறு­வனம் ஊடாக 0073900772 எனும் நடை முறைக் கணக்கில் இருந்து 566635 எனும் காசோலை இலக்­கத்தைக் கொண்ட காசோலை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்த உடன் காசோ­லையை தயா­சி­றியின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான பொலிஸ் கான்ஸ்­டபிள் அமில குமார ஹேரத் குரு­ணாகல் பகு­தியில் வங்­கி­யொன்றில் மாற்றி பண­மாக்­கி­ய­மையை அவ­ரிடம் பெறப்­பட்ட வாக்கு மூலத் தில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு கண்­டு ­பி­டித்­துள்ளது. 

இந் நிலையில் அந்த விட­யங்கள் குறித்து நேற்று தயா­சி­றி­யிடம் விரி­வாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.