Breaking News

அசாம் மாநிலத்தை புரட்டிய கனமழை - 4½ லட்சம் பேர் பரிதவிப்பு, 12 பேர் பலி.!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருதனால் மாநிலத்தின் முக்கிய நதிகளான பிரம்மபுத்ரா, தன்ஸ்ரீ, ஜியா பராலி, கோப்லி, கதாகால், குஷியாரா, லோங்காய் ஆகியவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகி றது.

கனமழையின் காரணமாக கரீம் கஞ்ச் மற்றும் ஹைலாகாண்டி உள்பட 6 மாவட்டங்கள் கனமழையால்  பாதிக் கப்பட்டு உள்ளன. பல இடங்களில் நதி களின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத் தில் 4½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இதுவரை யில் 12 பலியானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பரிதவிப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.