Breaking News

போதைப் பொருள் தொடா்பிலான 19 பேருக்கு மரண தண்டனை தீா்ப்பு.!

போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற் றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சா ளர் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

19 பேரும் இனம் காணப்பட்டுள்ளது டன் அவர்களிற்கு மரண தண்ட னையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத் திடவுள்ளார் என  அமைச்சர் தெரிவித் துள்ளார். 

போதைப்பொருள் தொடர்பான குற் றங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்காக மரண தண்டனையை நிறைவேற்றப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தெரிவு செய்யப்பட்ட சில குற்றவாளிகளிற்கு மரண தண்டனையை நிறை வேற்றுவதற்காக இலங்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண் டிக்கப்போவதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.