Breaking News

மஹிந்தவின் தலைமையில் பொதுஜன எதிரணி களமிறங்குவாா்கள் என - வாசுதேவ.!

எதிரணியில் அங்கம் வகிக்கும் இடது சாரி கட்சிகள் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியை அமைத்து அடுத்துவரும் மாகாணசபைத் தேர்த லில் போட்டியிடத் தீர்மானித்துள்ள தாக ஜனநாயக இடதுசாரி முன்னணி யின் தலைவரும் பாராளுமன்ற உறுப் பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளாா். 

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு வாசஸ் தளத்தில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் கட்சி தலைவர்கள் கூட் டத்தில் பொதுஜன கூட்டணி அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இக் கூட்டணி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையும் என்றும் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் இக் கூட்டணி சார்பிலேயே வேட்பாளர்கள் கள மிறக்கப்படுவார்கள் என எதிா்பாா்க்கப்படுகின்றது.