சி.வி.யின் அழைப்பை ஏற்பதாக - ரஞ்சன் ராமநாயக்க
வடக்கிற்கு வந்து மக்களின் பிரச்சினைகளை கண்டறியுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொள்வதாக சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித் துள்ளாா்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் முகமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறி க்கையில் மேற்கண்டவாறு மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறிய வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஊடகங்கள் ஊடாகத் தெரிவித்துள்ளாா்.
ஆகவே வடக்கு முதல்வரின் குறித்த அழைப்பை நான் ஏற்கின்றேன்.
எனவே சி.வி விக்கினேஸ்வரனுடன் இணைந்து வடக்கில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ள நான் தயாராகியுள்ளேன். அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் ஒழுங்க மைத்து வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.