Breaking News

சி.வி.யின் அழைப்பை ஏற்பதாக - ரஞ்சன் ராமநாயக்க

வடக்­கிற்கு வந்து மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விடுத்த அழைப்பை நான் ஏற்­றுக் கொள்வதாக சமூக நலன்­புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரிவித் துள்ளாா்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் விடுத்த அழைப்­பிற்கு பதி­ல­ளிக்கும் முக­மாக அவர் நேற்று ஊட­கங்­க­ளுக்கு விடுத்த அறி க்­கையில் மேற்­கண்­ட­வாறு மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிய வடக்­கிற்கு விஜயம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் ஊட­கங்கள் ஊடாகத் தெரிவித்துள்ளாா். 

ஆகவே வடக்கு முதல்­வரின் குறித்த அழைப்பை நான் ஏற்­கின்றேன். எனவே சி.வி விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து வடக்கில் கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொள்ள நான் தயா­ராகியுள்ளேன். அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் ஒழுங்க மைத்து வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.