விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.!
வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் பங்கு கொள்ளா தீா்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாகாணங்களின் அபிவி ருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதுடன் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்க ளும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரு மான இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.
இக் கடிதத்தின் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள் ளது.
இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக் கிரமிப்புக்கள் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இவை தொடர்பாக பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது.
ஆகவே செயலணியின் கூட்டத்தில் நிச்சயமாக பங்கு கொள்ளவேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனா்.
இதற்கேற்ப கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.








