Breaking News

மன்னாா் மாவட்ட குழு ஒருங்கிணைப்புச் சந்திப்பு !!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர்கள் இருவர் வெளி நடப்பு செய்துள்ளனர். 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்தாஸின் ஏற்பாட்டில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமை ச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அமைச்சர் பதி யுதீன் பிரதி அமைச்சர் கே.கே. மஸ் தான் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இணைத் தலைமையில் குறி த்த ஒருங்கிணைப்பு குழுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

கலந்துரையாடலிற்கு முன்னர் வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகி யோர் மண்ட பத்திற்குள் வருகை தந்த போது அவர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை என்ற காரணத் தினால் குறித்த இரு அமைச்சர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநான் சிவசக்தி ஆனந்தன் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் பிரதேசச் செயலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் திணைக்கள தலைவர்கள் பொலிஸ் கடற்படை உயர் அதிகாரிகள் மீனவ விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்துள்ளனா்.