Breaking News

திருகோணமலையில் யானைகளின் அச்சுறுத்தல் தீர்வு காண வேண்டும் -சம்பந்தன்

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல கிரா­மங்­களில் வாழும் மக்கள் காட்டு யானை­களின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளைச் சந்தித் துள்ளனா். 

அவ்­வாறு பாதிக்­கப்­படும் மக்­க­ளைப்­பா­து­காக்க நடவடிக்கை எடுக்க வேண் டுமென எதிர்­கட்­சித்­ த­லைவர் இரா. சம்­பந்தன் தெரிவித்துள்ளாா். 

திரு­கோ­ண­ம­லைக்கு நேற்றைய தினம் விஜயமாகிய அமைச்சர் பீல்­மார்சல் சரத்­பொன்­சே­கா­வி­டமே இக் கோரிக்­கையை விடுத்துள்ளதுடன் திரு­கோ­ண­மலை மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை நடந்த வன­வி­லங்­குகள் பாது­காப்பு மற்றும் அவற்றால் ஏற்­படும் பிரச்­சி­னைகள் பற்­றிய கூட்­டத் தில் கருத்துத் தெரி­வித்த சம்­பந்தன் மேலும் தெரிவிக்கையில்....,

கடந்­த கா­லங்­களில் கிரா­ம ­மக்கள் வன­ வி­லங்­குகளால் பெரிதும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர் .குறிப்­பாக இடம்­பெ­யர்ந்த மக்கள் வாழும் கிரா­மங்­க­ளைச்­சார்ந்த மக்­களே அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். 

குச்­ச­வெளி பிர­தேச செல­க­பி­ரிவல் உள்ள தென்­ன­ம­ர­வாடி .திரி­யாய்­போன்ற கிரா­மங்­க­ளிலும்.திரு­கோ­ண­மலை பட்­ட­ணம்­ பி­ரிவில் உள்ள வில்­கம்­வி­காரை, கப்­பல்­துறை, கன்­னியா மற்றும் சேரு­வில போன்ற பிர­தே­சங்­க­ளிலும் காட்­டு­யா­னை­களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளன. 

பல மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். ஆகையால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளது வாழ்­வா­தா­ரங்­க­ளை ­செய்கை பண்­ண ­மு­டி­யா­துள்­ளனர். எனவே இப்­ பி­ரச்­சி­னைக்கு முறை­யான தீர்வு காணப்­ப­ட ­வேண்டும். யானை­களைத் தடுக்க வேலிகள் வேக­மாக அமைக்­கப்­பட வேண்டும். 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உத­விகள் விட­யங்­க­ளிலும் கூடிய கவ­ன­மெ­டுக்­க ­வேண்­டி­யுள்­ளது. விரைவில் மாவட்­டத்தில் பாதிக்­கப்­படும் இடங்­களில் யானை ­வே­லி­களை அமைக்க அமைச்சு நிதி­களை ஒதுக்கி நட­வ­டிக்கை எடுக்­க ­வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 

இதே­வேளை இங்கு கருத்து வெளி­யிட்ட திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழ லும் பிர­தேச சபையின் தவி­சாளர் டாக்டர்.ஜீ.ஞான­கு­ணாளன் குறிப்­பி­டு­கை யில், 

திரு­கோ­ண­ம­லைக்கு அழ­கைத்­த­ரு­வது நக­ரிலும் கோணே­சர்­கோயில் பகு­தி­யிலும் வாழும் மான்­க­ளாகும். அவை­மு­றை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. அதற்­கான இடமும் இல்லை. இதனால் நகரில் கொட்­டப்­படும் மரக்­க­றி­க­ழி­வுகள் உள்­ளிட்ட பல­வற்றை அவை உண்­கின்­றன. இதனால் அவை பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றன. எமது நாட்டின் அழ­கான இந்த மான்­க­ளைப்­பா­து­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதற்­கான இடமும் ஒதுக்­கப்­ப­ட­ வேண்டும் எனவும் கோரிக்­கை வி­டுத்தார். 

 இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் சரத்­பொன்­சேகா தெரிவிக்கையில்....

நான் நாட்டின் யுத்­தத்தை தலை­மை ­தாங்கி முடி­வுக்கு கொண்டு வந்தேன். அதற்­கான வச­தி­களும் வழங்­களும் இருந்­தன. 

அதனால் அதனை செய்­ய­மு­டிந்­தது. இப் ­பி­ரச்­சி­னை­க­ளையும் ஒரு­ தே­சி­யப்­ பி­ரச்­சி­னை­யாக கருதி பல நட­வ­டிக்­கை­களை நாம் எடுத்து வரு­கின்றோம். எமது இந்த வன­ஜி­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தில் போது­மான வளங்கள் இல்லை. ஆள­ணி­களும் இல்லை. 

சிலர் நல்ல முறையில் செயற்­ப­டு­கின்­றனர். சிலர் பணத்­தை ­வேண்­டி­விட்டு முறை­யற்று செயற்­ப­டு­வ­தா­கவும் எனக்கு தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே இந்த யானைத்­ தாக்­குதல் பிரச்­சி­னை­யைத் ­த­டுக்க யானை ­வே­லியே ஒரு வழி­மு­றை­யாகும். 

தற்­போ­துள்­ள­ மு­றை­யிலும் சில தொழில்­நுட்­பப்­ பி­ரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றைச்­ சீர்­செய்து முறை­யான திட்­டத்தை வகுத்து இதற்­கான தீர்வை திணைக்­க­ளத்தின் சட்­ட­ திட்­டங்­க­ளுக்­க­மை­வாக நாம் ­காண்போம். அது­மட்­டு­மன்றி சுமார் 3000 தொண்டர் உத­வி­யா­ளர்­களை நிய­மித்து யானை ­வேலி உள்­ளிட்ட விட­யங்­களை பரா­ம­ரிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

மான்­களின் பிரச்­ச­னை­க­ளைப் ­பொ­றுத்­த­வரை அவற்­றிக்­கான காணி குறைந்­தது 25 ஏக்­க­ரா­வது தேவை ஏற்­படும். அதற்கான முறையான இடம் மற்றும் திட் டங்கள் பற்றி ஆராய வேண்டியுள்ளதாக பதிலளித்துள்ளாா். 

எது எப்படியாயினும் இவ் வருடம் முடிவதற்குள் தேசிய ரீதியில் யானைக ளின் அச்சுறுத்தலுக்கு 90 வீதமான தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த அவர் இதற்கு பலரும் ஒத்துழைப்பு நல்க  வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாமஹுரூப், க.துரைரெட்ணசிங்கம், உள்ளிட்ட பல உயரதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிக ளும் கலந்து சிறப்பித்துள்ளனா்.