Breaking News

வெலிக்கடை சிறையில் நிர்வாணமாக வீசப்பட்ட குட்டிமணி!!

வெலிக்கடை சிறையில் படுகொலைகள் நடைபெற முன் இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கொழும்பில் வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்களில் சுமார் இருநூறு பேர் வெலிக்கடைச் சிறை முன்றலுக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்லவேண்டுமென ஆக்ரோசமாக கோஷமிட்டனர். 

பின்னர் சிறைக்கதவை தகர்க்க முற்பட்டனர். சிறையின் பிரதான வாசலிலும், ஏனைய நாற்புறங்களிலும் சிறிலங்கா படையினர்; காவலுக்கு நிறுத்தப்பட்டி ருந்த நிலையில் காடையர்களின் இந்த அட்டகாசங்கள் நடைபெற்றன. 

இந் நிலையில் முதன்மை சிறை அதிகாரியும் ,சிறைகாவற்துறை காவல் அதி காரியும் காடையர் கூட்டத்தை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு உத்தரவாதத்தை வழங்கினர் . நீங்கள் உள்ளே வந்துதான் இதனை செய்ய வேண்டியதில்லை. 

நாங்களே நாளை நல்ல செய்தி ஒன்றினை உங்களுக்கு தருவோம் என்பது அந்த உறுதிமொழி சிறைஅதிகாரிகள் அளித்த இந்த உறுதிமொழியை அடுத்து காடையர்கள் திருப்பிச் சென்றனர். 

சிறையின் முக்கிய அதிகாரிகள் காடையர்களிடம் இந்த உறுதியை வழங்கிய போது சிறைக்கு வெளியே காவலுக்கு நின்ற தமிழ்காவல் அதிகாரி ஒருவரும் அதனை கவனித்து விட்டார். இதனையடுத்து சிறை காவல் பணியில் இருந்த தமிழ் பணியாளர்கள் அனைவரும் சிறையின் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. 

எல்லா தமிழ் பணியார்களுக்கும் வெளிவேலைகளே வழங்கப்பட்டன. காடை யர்களுக்கு சிறைஅதிகாரிகள் அளித்த உறுதிமொழியை நேரடியாக கண்ட இந்த தமிழ் அதிகாரி பின்னர் இச் செய்தியை மட்டக்களப்புச் சிறையில் காவல் பணியில் இருந்த தமிழ் அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. 

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் முதற் கட்டமாக வெலிக்கடை படு கொலைகள் இடம்பெற்றிருந்தன. தமிழ் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது போல இனவெறியர் களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்தன இதனால் தான் சடுதியாக பாய்ந்த கைதிக்காடையர்களின் ஆயுதங்கள் தமிழ் இளைஞர்களின் தலை களைப் பிளந்தன. கண்களைத்தோண்டின. 

இதயங்களை கிழித்தன. குடல்களை உருவின. குரல்வளைகளை அறுத்தன. கை, கால்களைத் துண்டித்தன. முதற்கட்டப்படுகொலைகள் முடிக்கப்பட்டவு டன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்றபடையினர் உள்ளே அழைக்கப்பட்டனர். 

முதற்கட்ட சிறை படுகொலைகள் நடைபெற்றபோது உலங்கு வானூர்தி ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கண்காணிப்பை மேற் கொண்டது. உலங்கு வானூர்தியின் இந்த கண்காணிப்பு நடவடிக்கையானது வெலிக்கடை படுகொலைக்கும் அரச உயர் மட்டத்துக்கும் இருந்த தொடர்பை வெளிப்படையாகவே உறுதிப்படுத்தியது. 

குட்டிமணி, ஜெகன் ஆகிய இருவருக்கும் அவர்கள் மீதான வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்ட போது அவர்கள் இருவரும் ஒரு வேண்டுகோள் விடுத்தமை அனைவரும் அறிந்த செய்தி. 

தமக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்ட பின்னர் தமது கண்களைக் கண் பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் தமிழீழத்தை தாம் பார்க்க வேண்டு அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனா். 

இவ்வாறான ஒரு கோரிக்கையை குட்டிமணி விடுத்தார் என்பதற்காக அவர் குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். 

அதன் பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய குடுரம். கைதிகாடையர்கள் விசில டித்து ஆர்ப்பரித்து ஜெயவேவா கொட்டொலியை எழுப்பிய குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர். 

குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் ஏனைய கைதிகள் கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரித்தனர். குட்டிமணியின் கண்களைத் தோண்டிய வர் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டு வீரனாகக் கொண் டாடப்பட்டான். 

ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் உறுப் புகளை வெட்டினர். இறுதியாக குட்டிமணியின் உடலத்தை நிர்வாணமாக போட்டார்கள். 

இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு அவரது உறுப்புகள் வெட்டப் பட்டு அவரின் உடலும் நிர்வாணமாக வீசப்பட்டது. முதல்நாள் மட்டும் சிறைச் சாலையின் பி-3 பிரிவில் மொத்தம் 29 பேர் பலியெடுக்கப்பட்டனர். 

அன்றிரவு இந்தப் படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மது வும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டது. அதேவேளையில் சிறைச் சாலையின் இன்னொரு மூலையில் இரண்டாவது படுகொலை தாக்குதலுக் கான திட்டங்கள் மும்முரமாக தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன.

முதற் கட்டப்படுகொலைகள் நடைபெற்ற அன்று இரவு முப்பது மணியை தாண்டி வேளையில் சிறைக்கூடத்தின் பின் பகுதியால் இரண்டு மூன்று பேர் சிறை அதிகாரிகளுடன் உள்ளே பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர். 

கறுத்த அங்கிகளை அணிந்திருந்த இவர்கள் 28 அறைகள் கொண்ட பி; பகு தியை ஒரு நோட்டம் விட்டனர். அந்த கறுத்த அங்கி குழுவில் இருந்த ஒருவர் ஞானசேகரன் என்ற கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையின் முன்னால் வந்து நின்றார். 

அன்றைய கால கட்டத்தில் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை தொடர்பாக கைது செய்யபட்டு அந்த வழக்கில் முதலாம் எதிரியாக பதிவு செய்யப்பட்ட புளொட் உறுப்பினர் தான் இந்த ஞானசேகரன் இவர்தான் பின்னாளில் ஈ என். டி .எல். எப் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர். 

ஞானசேகரனின் அறையின் முன்னால்; வந்து நின்ற இந்த கறுத்த அங்கி உருவம் சிறிலங்காவின் முதன்மை நீதிபதி என தன்னை ஆங்கிலத்தில் அறி முகப்படுத்தியது. அதன்பின்னர் இங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீங் கள் சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என அவர் ஞானசேகரனிடம் வின வினார். 

 தடங்கள் தொடரும்…..

- நன்றி ஐ.பி.சி .இணையத்திற்கு