Breaking News

கிளிநொச்சி முல்லை வீதியில் யுவதியின் சடலம் மீட்பு.!

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதி யில் உள்ள வயல் கால்வாயில் யுவதியின் சடலமொன்று இன்று காலை மீட் கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதி வயல் கால்வாய்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை யடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த யுவதிக்கு சுமார் இருபது வயது இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது சடலத்தின் முகப்பகுதியில் இடிபட்டு பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடை களுடன் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக் கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின் கொலை செய்யப் பட்டு இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப் படாத நிலையில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியையும் குற்றத் தடயவியல் பொலிஸாரையும் அழைத்து செல்வ தற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளா் தெரிவித்துள்ளாா்.