Breaking News

பதவி வேண்டுமென்றால் அரசாங்கத்தை விட்டு வெளியில் வாருங்கள் - சுமந்திரன்

தேசிய அரசாங்கத்தில் ஆளும் தரப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்குவதை ஏற்க முடியாது. 

எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள் ளாா். 

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து குறித்து இன்று பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்றத்தில் வெவ்வேறு கட்சிகள் பிரதி நிதித்துவப்படுத்துகின்றது. இதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யில் ஒரு தரப்பினர் எதிரணியில் அங்கம் வகிக்கின்றனர். 

எனினும் அவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே உள்ளனர். அவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி பதவியை தரக்கோருகின்றனர். ஆனால் இது சாத்தியமற்றதாகும். 

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 23 பேர் அமைச்சரவையில் உள்ளனர். அரசாங்கத்தின் தீர்மானங்களை முன்னெடுத்துள்ளமையால் அதே அணியை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க கோருவது ஏற்றுகொள்ள முடியாதெனத் தெரி வித்துள்ளாா்.