Breaking News

அரசியல் காரணிகளால் தோ்தலை பிற்போட முடியாது - மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை யினை பிரதமர் தோல்வியடைய வைத்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளதாக தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரி வித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலை மையகத்தில் இன்று நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து உரை யாற்றுகையில் இவ்வாறு தெரிவித் துள்ளாா். 

பழயை முறைமையில் தேர்தலை நடத்த நாம் ஆதரவு வழங்கவில்லை. புதிய தேர்தல் முறைமையிலும் சில குறைபாடுகள் உள்ளது. இவ்வாறான குறைபாடுகளை முன்னிட்டு தேர்தலை நடத்தினால் அது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும்.

மேலும் பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் தல‍ைமையிலான ஐவர் அடங்கிய குழுவினரிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இரண்டு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணய அறிக்கையில் காணப் படுகின்ற குறைபாடுகளை திருத்தி ஜனாதிபதிக்கு மீளாய்வு அறிக்கையை சமர் ப்பித்ததன் பின்னர், விரைவில் மாகாண சபை தேர்தல்களை நடத்த நடவடிக் கைகள் எடுக்கப்படும். 

ஆகவே எவருக்கும் அரசியல் காரணிகளை காரணம் காட்டி தேர்தலை பிற் போடுவதற்கு அதிகாரம் கிடையாதெனத் தெரிவித்துள்ளாா்.