Breaking News

யாழ் வட்டுக்கோட்டையில் குள்ள மனிதர்களாம் - யாழில் அச்சம்.!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந் தெரியாத நபர்களின் அச்சுறுத்தல் தொடா்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனா். 

வட்டுதெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டவுடன் வீட்டின் மேல் நட ந்து திரியும் சத்தம் கேட்ட போது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியபோது ஒரு நபர் நடப்பது போன்று இருந்ததா கவும் இதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டபோது வீட்டின் மேலருந்த நபர் தப்பிச் சென்றதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளாா். 

இதேவேளை இதற்கு முதல் நாள் இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும் மக்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இவ்வாறானவர்கள் நடமாடித் திரிந்துவிட்டு நள்ளிரவு வேளையில் கற்கள் எடுத்து வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். 

பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸாரும் சம்பவ இடத் துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.   

இதேவேளை கடந்த இரண்டு வாரமாக இவ்வாறான சம்வம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் குறிப்பாக அராலிப் பகுதியில் நடைபெற்று வருவதுடன் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனா்.