Breaking News

ஜனாதிபதி மைத்திரி மீது குற்றச்சாட்டு - வடமாகாண சபை உறுப்பினா்.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமல்ல எனத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அத் தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மஹிந்தவின் ஆட்சிக் கால த்தில் இப்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவே எனத் தெரிவித்துள்ளாா். 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெற வில்லையென  அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங் கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்கள குடியேற்றத்தை உருவாக்கும் நோக்கு டன் ஹிபுல் ஓயா திட்டம் கொண்டு வரப்பட்டது. 

வெள்ளக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்த நிலை யில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.  அதேபோல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனரக வாகன ங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்களு டைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. 

மேலும் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கு மேலாக வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக் களம் என பல வடிவங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத் தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விழுங்கப் பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.